துர்கா ஸ்டாலின் உதவியாளர்னு சுற்றியவர்.. அரிவாளால் அருணாவை வெட்ட பாய்ந்த கணவர்.. என்னாச்சு?
அரிவாளால் மனைவியை வெட்ட முயன்ற கணவரிடம் விசாரணை நடக்கிறது
காஞ்சிபுரம்: மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து வெட்ட பாய்ந்த கணவர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் போலீசார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே சின்னாலம்பாடி ஊராட்சியில் வசித்து வருபவர் ரவி... இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்...
இவருக்கு 2 மனைவிகள்.. இரண்டாவது மனைவி பெயர்அருணா.. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

கணவர் ரவி
இந்நிலையில், அருணாவுடனும் தகராறு செய்ய ஆரம்பித்துள்ளார் ரவி.. தினம் தினம் பிரச்சனை செய்யவும், வெறுப்படைந்த அருணா, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால், அம்மா வீட்டிலேயே இருப்பதால் பிள்ளைகளின் படிப்பு பாழாவதாக நினைத்தார்.. எனவே பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மறுபடியும், சின்னாலம்பாடியில் உள்ள ரவி வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார்.. அதற்கு முன்பாக, சாலவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார் அருணா..

ஆத்திரம்
கணவன் வீட்டுக்கு செல்வதால், அங்கு ஏதெனும் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு கணவர் ரவியும் அவருடைய முதல் மனைவியும்தான் தான் காரணம் என்று எழுத்துப்பூர்வமாக கடிதம் தந்தார்.. அதற்கு பிறகு குழந்தைகளை அழைத்து கொண்டு, கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.. கூடவே சில உறவினர்களையும் அழைத்து சென்றுள்ளார்.. போலீஸ் ஸ்டேஷனில் எழுதி கொடுத்து விட்டு வந்திருப்பதை அறிந்த ரவி, ஆத்திரமடைந்தார்..

துர்கா ஸ்டாலின்
அரிவாளை எடுத்து கொண்டு அருணாவை வெட்ட பாய்ந்தார்.. ஆனால், அதற்குள் அருணாவின் சகோதரர் குறுக்கே ஓடிவந்து தடுத்துவிட்டார். இதில், அருணாவுக்கும் அவரது சகோதரருக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. இந்த வீடியோதான் இணையத்தில் வைலாகி கொண்டிருக்கிறது... இந்த வீடியோ ஆதாரங்களை வைத்து விசாரணை நடந்து வருகிறது..

விசாரணை
சம்பந்தப்பட்ட ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் உதவியாளர் என்று கூறிக் கொண்டு பல இடங்களில் தொடர்ச்சியாக மோசடி செய்து வருகிறாராம்.. இதை அருணாவே போலீஸில் தெரிவித்துள்ளார்.. பாதுகாப்பு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட போலீசில் கேட்டும், எந்த பாதுகாப்பும் தனக்கு அளிக்கவில்லை என்றும், அதனால், மாவட்ட எஸ்பியையே நேரில் சந்தித்து மனு அளித்ததாகவும் அருணா கூறியுள்ளார்.. இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications