குமரியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்... பதக்கங்களை வழங்கி கௌரவித்தார் கலெக்டர்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

குமரியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 26 பயனாளிகளுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிறப்பாக பணியாற்றிய 65 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கமும், அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீ நாத், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி மற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications