மீனவர்கள் குடும்பத்துக்கு மாதம் ரூ.2,000.. கன்னியாகுமரியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்!
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட மக்களை கவரும் வகையில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். கல்வி மற்றும் திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 6 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான 6 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

1. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் கன்னியாகுமரி நகராட்சியின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, பழையாற்றிலிருந்து கூடுதல் நீர் வழங்கும் வகையில் ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
2. முக்கடலும் சங்கமிக்கும் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
3. குளச்சல் நகராட்சி மற்றும் மண்டைக்காடு பேரூராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
4. களியக்காவிளை - கன்னியாகுமரி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் ரூ.9 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்படும்.
5. கல்குளம் வட்டம், முளக மூட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம், அதன் பழமை மாறாமல் ரூ.2 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
6. தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி மற்றும் திருமண உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிகள் உயர்த்தி வழங்கப்படும். கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீனவர்கள் காணாமல் போனால், அவர்களுக்குக் காப்பீடு மற்றும் நிவாரணத் தொகைகள் கிடைக்கும் வரை, அந்த மீனவர் குடும்பத்திற்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வாரியத்தின் மூலம் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications