Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியில் காதலியுடன் ஓடிபோன பெங்களூர் ஐடி ஊழியர்.. கல்யாண மேடையில் மணமகளுக்கு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பைங்குளம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருவட்டாரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மணமகன் அதற்கு முதல் நாள் திடீரென மாயமானதால் திருமணம் நின்றுப்போனது. கடைசி நேரத்தில் காதலியை கரம்பிடிக்க மணப்பெண்ணை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதலிப்பவர்கள் தயவு செய்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் போதே உண்மையை சொல்லிவிடுங்கள். கடைசி நேரத்தில் ஏமாற்றிவிட்டு, மணமேடைக்கு வராமல் ஓட்டம்பிடிப்பது அதிகரித்துள்ளது. சினிமாவை பார்த்து உண்மை என்று, ஹீரோயிஷம் செய்வதாக நினைத்து தன்னையும் ஏமாற்றி, தன்னை நம்பி வர இருந்த பெண்ணையும் ஏமாற்றி, பெற்றோர் உறவினர்களையும் ஏமாற்றி செல்வது என்பது பெரிய தவறு. அதேபோல் தான் சில பெண்கள் திருமணத்திற்கு முதல் நாள் காதலனுடன் ஓடிப்போகும் சம்பவங்கள் நடக்கிறது. திருமணம் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக சொல்வது நல்லது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

Bengaluru IT employee

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பைங்குளம் பகுதியை சேர்ந்த 29 வயதாகும் பொறியியலாளர் ஒருவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சாப்ட்வேர் என்ஜினியரான அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி கடந்த 6 மாதத்துக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த ஆற்றூரைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஐடி என்ஜினியருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. மணப்பெண் முதுகலை படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.

இருவீட்டார் சம்மதத்துடன் திருமண தேதியும் குறிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 27-ந் தேதியான நேற்று திருமணத்தை நடத்தலாம் என பெரியவர்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது. திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்றுமுன்தினம் உண்ணாமலை கடை பயணம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணப்பெண் வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பங்கேற்க மாப்பிள்ளை வீட்டார் மதியம் மண்டபத்துக்கு வருவார்கள் என எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால் ரிசப்சனுக்காக காத்திருந்த மணப்பெண் வீட்டாருக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மணமகன் வீட்டில் இருந்து செய்தி வந்தது. அதாவது பெண்ணின் தந்தைக்கு, மணமகனின் மாமா என்று ஒருவர் போனில் பேசி உள்ளார். மணமகன் பெங்களூருவில் ஒரு வழக்கில் கைதாகி உள்ளதாகவும், உங்கள் மகளுக்கு வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என கூறினார்களாம். இதனை கேட்டு, மகிழ்ச்சியோடு காத்திருந்த மணப்பெண்ணும் துடிதுடித்து போனார். மணப்பெண் வீட்டாரும் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள்.

எனினும் முழு விவரத்தை அறிய மணப்பெண் வீட்டார் தரப்பினர், மணமகனின் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. மணமகனை தொடர்பு கொண்டபோது அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்திருக்கிறது. இதையடுத்து பெண் வீட்டார் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மணமகனான என்ஜினியருக்கும், உடன் வேலை பார்த்த பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்ததும் தெரியவந்தது. கடைசி நேரத்தில் காதலியை கரம்பிடிக்க மணப்பெண்ணை அவர் ஏமாற்றியதும் அம்பலமானது. மேலும் காதலியை அவர் திருமணம் செய்ததாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து நேற்று நடக்க இருந்த திருமணம் நின்று போயிருக்கிறது. இந்த சம்பவம் கன்னியாகுமரி திருவட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+