மீண்டும் எம்பியான விஜய் வசந்த்.. குமரியில் வென்றதும் குடும்பத்தோடு செய்ததை பாருங்க.. நெகிழ்ச்சி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார். அவர் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தினார். இந்த வெற்றிக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் செய்த செயல் நெகிழ வைத்துள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

அதன்படி இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் சிட்டிங் எம்பியாக மீண்டும் களமிறங்கிய திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மொத்தம் 5,46,248 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மத்திய இணையமைச்சர் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 3,66,341 ஓட்டுகள் பெற்றார். இதனால் விஜய் வசந்த் மொத்தம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 907 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர் 3ம் இடம் பிடித்தார். அவர் 52,721 ஓட்டுகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் பசிலியான் 42,393 ஓட்டுகள் பெற்று 4ம் இடம் பிடித்தார்.
இதன்மூலம் விஜய் வசந்த் 2வது முறையாக கன்னியாகுமரி எம்பியாகி உள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அவரது தந்தையான வசந்த் அண்ட் கோவின் உரிமையாளர் வசந்தகுமார் பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தி எம்பியானார். அதன்பிறகு கொரோனா சமயத்தில் அவர் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து 2021ல் நடந்த தேர்தலில் தந்தை வசந்த குமாருக்கு பதிலாக மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தி முதல் முறை எம்பியானார். அதன்பிறகு இப்போது 2வது முறையாக எம்பியாகி உள்ளார்.
இந்நிலையில் தான் கன்னியாகுமரியில் எம்பியான பிறகு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை விஜய் வசந்திடம் தேர்தல் அதிகாரி வழங்கினார். அந்த சான்றிதழை கையில் வாங்கிய விஜய் வசந்த் தனது தாய் ஜெப்ரீன், மனைவி நித்யா, மகன் மகளுடன் தந்தை வசந்தகுமாரின் நினைவிடத்துக்கு சென்றார். அதன்பிறகு வெற்றி சான்றிதழை தனது தாயிடம் வழங்கிய விஜய் வசந்த் தந்தை வசந்தகுமாரின் நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றார்.
மேலும் அங்கிருந்த வசந்தகுமாரின் போட்டோவின் முன்பு சான்றிதழ் வணங்கினார். அதுமட்டுமின்றி தனது தந்தையின் நினைவிடத்தில் உள்ள வசந்தகுமாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் நெகிழ்ச்சியடைந்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications