விஷம் சாப்பிட்டேன்.. செத்துடுவேன் போல இருக்கு.. எப்படியாவது காப்பாத்திடு.. மனைவியிடம் கெஞ்சிய கணவர்
விஷ மாத்திரை சாப்பிட்ட போதை நபர் பரிதாபமாக உயிரிழந்தார்
கன்னியாகுமரி: "விஷ மாத்திரை சாப்பிட்டுட்டேன்.. நான் செத்துடுவேன் போல இருக்கு.. என்னை எப்படியாவது காப்பாத்தும்மா" என்று மனைவியிடம் கெஞ்சிய போதை கணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள பகுதி திக்குறிச்சி வாளைவிளை. இங்கு வசித்து வருபவர் ராஜேந்திரன்.. 55 வயதாகிறது.. ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.. நிர்மலா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 2 பேருமே வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்கள்.

ராஜேந்திரன் தினமும் தண்ணி அடிப்பவராம்.. அப்படி தண்ணி அடித்துவிட்டால், வீட்டில் நிர்மலாவிடம் சண்டை போடாமல் இருக்கவே மாட்டாராம். ஒவ்வொரு முறை சண்டை போடும்போதெல்லாம், "உன்கூட இருப்பதைவிட, சாகறதே மேல்" என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பாராம். விடிந்ததும்.. போதை தெளிந்து சண்டையையும் மறந்துவிடுவாராம்.
இப்படித்தான், நேற்று மதியமே ராஜேந்திரன் ஃபுல் போதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்குள் போனவர், திடீரென "நான் போதையில் விஷ மாத்திரை சாப்பிட்டுட்டேன்.. செத்து விடுவேன் போல் இருக்கு.. என்னை எப்படியாவது காப்பாத்தும்மா" என்று சொல்லி கொண்டே மயங்கி விழுந்துவிட்டார்.
இதனால் பதறி போன நிர்மலா, கணவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்... பிறகு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும், ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜேந்திரன் என்ன மாத்திரை சாப்பிட்டார், ஏன் சாப்பிட்டார், என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். போதையில் விஷ மாத்திரை சாப்பிட்டு, கடைசி நேரத்தில் காப்பாற்றுமாறு மனைவியிடம் கெஞ்சிய கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications