Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு குட்நியூஸ்.. நாட்டு கோழிப்பண்ணைகள் அமைக்க 50 சதவீத மானியம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 10 நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025-26-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் நாட்டு கோழிப்பண்ணைகள் நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீத மானியம் மாநில அரசால் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்) 10 நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025-26-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

Good news for the youth of Kanyakumari district 50 percent subsidy to set up country poultry farms

இத்திட்டத்தில் நாட்டு கோழிப்பண்ணைகள் நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீத மானியம் மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி மூலமாகவோ, தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்ட வேண்டும்.

ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படும். தகுதிவாய்ந்த விருப்பமுள்ள பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, நில உரிமை ஆவணம், தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டரிடம் விண்ணப்பம் அளித்து பயனடையலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.

வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 2½ ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்பு தொழில் செய்துவரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவுசெய்து அரசு மானிய திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மீன்வள விவசாயிகள் நிலையான மீன்வளர்ப்பை தொடர்ந்து மேற்கொள்ளவும், மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கவும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்ற மீன்பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 2½ ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.

ஆகவே வேலூர் மாவட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்து உள்ளீட்டு மானியத்தினை பெற்று பயனடையலாம். இதுதொடர்பான கூடுதல் தகவல்கள், விண்ணப்பங்கள் பெற காட்பாடி காந்திநகரில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் அணுகலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+