ஆஸ்பத்திரி ரூமில்.. 35 வயசு நர்ஸும்.. அவரும்.. உள்ளே வைத்து பூட்டிய மக்கள்.. விடிய விடிய பரபரப்பு
கள்ள ஜோடியை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் குமரியில் நடந்துள்ளது
கன்னியாகுமரி: 35 வயசு நர்சும், அவரது கள்ள காதலனும் ஆஸ்பத்திரி ரூமில் ஜாலியாக இருந்துள்ளனர்.. இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் அவங்க ரெண்டு பேரையுமே உள்ளே வைத்து பூட்டி விட்டனர்.. விடிய விடிய அந்த கள்ளக்காதல் ஜோடியை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை குமரியில் ஏற்படுத்தி உள்ளது.
குமரி மலையோர பகுதியில் ஒரு அரசு ஆஸ்பத்திரி உள்ளது.. இங்கு செயல்படும் 108 ஆம்புலன்சில் வேலை பார்க்கும் அந்த நர்சுக்கு வயசு 35 ஆகிறது... அவருக்கு ஒரு கள்ளக்காதலன்.
இதற்கு முன்பு வேறு பகுதியில் உள்ள ஆம்புலன்சில் வேலை பார்த்தபோது, அந்த கள்ளக்காதலன் டிரைவராக அங்கு இருந்தவர்.. அப்போதிருந்தே இவர்களுக்கு பழக்கம்.

நர்ஸ்
கண்ட இடங்களில் ஊர் சுற்றி, எல்லாருக்குமே இவர்களின் சமாச்சாரம் தெரிந்துவிட்டது.. அதனால்தான், இந்த ஆஸ்பத்திரிக்கு டிரான்ஸ்பர் செய்து விட்டனர்.. இங்கு வந்தும் அந்த நர்ஸ் அடங்கவில்லை.. ஃபீரி டைம் கிடைக்கும்போதெல்லாம், அந்த டிரைவரை வரவழைத்து ஜாலியாக இருந்துள்ளனர். மற்ற நேரங்களில் வீடியோ கால் செய்து அவருடன் பேசிக் கொண்டே இருப்பாராம்.

சிக்கல்
இந்த சமயத்தில்தான் கொரோனா வந்துவிடவும், இவர்கள் சந்திப்பதில் கொஞ்சம் சிக்கலானது.. சமீப காலமாக தொற்று பாதிப்பில் இருந்து நிறைய பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிடவும், ஆஸ்பத்திரி ரூம்கள் எல்லாம் காலியானது.. இதுதான் சாக்கு என்று நினைத்த அந்த நர்ஸ், நடுராத்திரி காதலனை வரவழைப்பாராம்.. அவரும் பைக் எடுத்து கொண்டு வருவார்.. உடனே எந்தரூம் காலியாக இருக்கிறதோ அந்த ரூமுக்குள் நுழைந்து விடுவார்களாம்.

டிரைவர்
மறுநாள் காலையில்தான் வெளியே வருவார்களாம்.. இப்படியே இவர்கள் செய்து வந்ததை அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் கவனித்து வந்தனர்.. நடுராத்திரி பைக் சத்தம் கேட்டாலே டிரைவர்தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார் என்று தெரிந்துவிட்டது.. அதனால் அவர்களை கையும் களவுமாக பிடிக்க காத்திருந்தனர். அதன்படியே ராத்திரி 11 மணிக்கு பைக் வந்து ஆஸ்பத்திரியில் நின்றது. இளைஞர்களும் உஷாரானார்கள்.

கதவு
டிரைவர் கையில் ஒரு பார்சலுடன் அந்த ரூமுக்குள் நுழைந்ததுமே, பின்னாடியே சென்ற இளைஞர்கள் டக்கென அந்த ரூம் கதவை வெளியே பூட்டிவிட்டனர்.. பிறகு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தந்தனர்.. ஆஸ்பத்திரிக்குள் கள்ளகாதல் ஜோடி என்றதுமே, தூங்கி கொண்டிருந்த மக்கள் எல்லாம் ஓடிவந்தனர்.. பிறகு ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் ரூம் கதவை திறக்குமாறு கோஷமிட்டனர்.. அதன்படியே ஊழியர்கள் கதவை திறந்து பார்த்தால், அங்கேதான் ட்விஸ்ட்.

அதிர்ச்சி
அந்த ரூமில் யாருமே இல்லை.. இதனால் அதிர்ந்த மக்கள், பாத்ரூமில் பாருங்கள் என்று கத்தி கூச்சலிட்டனர்.. அதன்படியே பாத்ரூமுக்குள் சென்று பார்த்தால், 2 பேரும் ஒளிந்து கொண்டு நின்றிருந்தனர்.. உடனே நர்ஸ், இது என் புருஷன் என்று கூறி சமாளிக்க பார்த்தார்.. ஆனாலும் பொதுமக்கள் விடவில்லை.. போலீசுக்கு சொல்வோம் என்று மிரட்டவும், கள்ளக்காதல் ஜோடி நடுநடுங்கிவிட்டது.

விடிகாலை
இப்படியே விடிகாலை 3 மணிவரை பஞ்சாயத்து போனது.. கடைசியில்தான் தன் கள்ளக்காதல் என்று கண்ணீருடன் நர்ஸ் ஒப்புக் கொண்டு, தவறுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார்... இனிமேல் இப்படியெல்லாம் செய்ய மாட்டோம் என்று 2 பேருமே கெஞ்சினர்.. அதன்பிறகே அவர்களை பொதுமக்கள் மன்னித்து விடுவித்தனர்.. விடிய விடிய கள்ளக்காதல் ஜோடியை சிறைவைத்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. எ












Click it and Unblock the Notifications