கன்னியாகுமரியில் இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழை.. என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?!
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்க்கிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் கடந்த 8ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
அதேபோல் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

வெளுத்துவாங்கும் மழை
கன்னியாகுமரியின் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று திற்பரப்பு, முஞ்சிறை, கோதையார், திருவட்டார், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தக்கலை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் தற்போது கொட்டித்தீர்க்கும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் இடைவிடாமல் கொட்டும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும்
தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாராங்கள் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 500 மில்லி மீட்டருக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.
|
கடல் சீற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. மேலும் கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பீதியடைந்துள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தற்போது விளாசி வருகிறது
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும் கன மழை கொட்டி வருவதாக தனியார் வானிலை அறிவிப்பாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தற்போது அதிக மழை அடித்து பெய்துவருவதாகவும் அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியிலும் பெய்யும்
மேலும் நெல்லை, தேனி, நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்துவருவதாக அவர் கூறியுள்ளார். தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய உதவும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications