உதயநிதியுடன் பேசுனீங்களா?.. "குழப்பி.. மழுப்பி.. உழப்பி".. கமல் சார்.. எங்க கபாலம் கலங்கிப் போச்சு!
கன்னியாகுமரி: சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வழக்கம் போல மழுப்பலான பதிலையே தெரிவித்தார்.
தென் தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தேர்தல் பிரசாரம் செய்த கமல்ஹாசன் இன்று கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, திமுகவுடனான கூட்டணி தொடர்பாக உதயநிதி ஸ்டாலினை நீங்கள் சென்னயில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வந்துள்ளனவே என்ற கேள்விக்கு கமல்ஹாசன் அளித்த முழுமையான பதில்:
தகவலை நீங்கள் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் என்பதுதான். ஏனென்றால் செய்தி என்பது நாளைய சரித்திரம்.

அதில் செய்யும் போது கலப்படம் இல்லாமல் செய்ய வேண்டியது உங்கள் கடமை. அது எங்கள் கடமையும்.
உங்களுக்கு நாங்கள் செய்தியாக சொல்லும் போது குழப்பம் இல்லாமல் சொல்வதும் நீங்கள் அதை மக்களுக்குச் சொல்லும் போது அதில் எந்தவித குழப்பமும் கலப்படமும் இல்லாமல்...
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தூத்தூரில் .. தற்போது நேரலையில்... https://t.co/UhpIwBq3BN
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 16, 2020
நல்ல செய்தியானாலும் கெட்ட செய்தியானாலும் அதை உண்மையுடன் உரைத்தால் நாளை அதை சரித்திரத்தில் படிக்கப்படும் போது உங்கள் நேர்மையை அது பிரதிபலிக்கும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications