எச்சில் தட்டில் சோறு.. கணவரிடம் பேச கூடாது.. மருமகளை காலி செய்த கன்னியாகுமரி மாமியார்.. இப்ப பாருங்க
கன்னியாகுமரி: "ஸாரி..ம்மா.. என்னை மன்னித்திடுங்க.. எனக்கு வாழாவெட்டியாக வீட்டில் வந்து இருக்க விருப்பமில்லை.. அதனால் மட்டும்தான் நான் இப்போ போகிறேன்" என்று ஆடியோவில் பேசி உயிரையும் விட்டிருந்தார் கன்னியாகுமரி புதுமணப்பெண்.. இவரது மரணத்துக்கு முழுமுதற் காரணமான மாமியார் என்ன ஆனார் தெரியுமா?
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்... இவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் ஸ்ருதி.. 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுருதி.

ஆடியோ: கடந்த 21-ம் தேதி சுருதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால், தற்கொலைக்கு முன்பு, வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றில் பேசி, அதனை தன்னுடைய அம்மா, அப்பாவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அதில், "அம்மா, என்னை என்னுடைய மாமியார், அம்மா வீட்டில் விட்டுவிட வேண்டும் என அடிக்கடி சொல்றாங்க.. அப்படி வாழாவெட்டியாக உங்கள் வீட்டில் வந்து உட்கார எனக்கு விருப்பமில்லை.. அதைவிட இங்கு இருப்பது எவ்வளவோ மேல்.. அவருக்கும் (கணவர்) எனக்கும் இந்த நாள் வரை எந்த பிரச்சினையும் வந்ததில்லை.. எல்லா பிரச்சனையும் இவங்களால்தான் (மாமியார்) வருது.
மாமியார் டார்ச்சர்: கணவருடன் நான் வெளியே செல்லக்கூடாதுன்னு சொல்றாங்க.. கணவர் சாப்பிட்டப்புறம்தான் நான் சாப்பிடணுமாம். என் கணவர் பக்கத்தில் நான் உட்கார கூடாது.. அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது.. எச்சில்தட்டு எடுத்து சாப்பிடணும்.. இப்படியெல்லாம் என்னை கொடுமைப்படுத்தறாங்க".. ஸாரிம்மா" என்றெல்லாம் அந்த ஆடியோவில் கண்ணீர்விட்டு பேசியிருந்தார்.
இதையடுத்து, சுருதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவல்லி மற்றும் சுருதி பாபுவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது... ஆனால், அதற்குள் சுருதியின் ஆடியோ தமிழகமெங்கும் பரவி, பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திவிட்டது.
தற்கொலை முயற்சி: இதனால், கடந்த 23-ம் தேதி வீட்டில் இருந்த செண்பகவல்லி கைதுக்கு பயந்து திடீரென விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் மற்றும் உறவினர்கள், செண்பகவல்லியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், மாமியார் செண்பகவல்லி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகின்றனர்... புதுமணப்பெண் தற்கொலை செய்த சோக சுவடு மறைவதற்குள், அவரது இறப்புக்கு முக்கிய காரணமாக குற்றம்சாட்டப்பட்ட மாமியாரும் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications