கன்னியாகுமரி கலக்குதே.. கண்ணாடி இழை பாலம் ரெடி.. திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா.. இதுதான் பிளான்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 37 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைக்கிறார்.
கன்னியாகுமரி கடல்நடுவே விவேகானந்தர் பாறை அருகே உள்ள இன்னொரு பாறையில், கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, அதை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

பாலம் பணிகள்: கன்னியாகுமரியின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக திகழும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்க்க படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது. எனவே, விவேகானந்தர் பாறைக்கு செல்வோர் அனைவருமே திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வரும் வகையில் ரூ.37கோடி செலவில் கடல்சார் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்க முடிவாகி, அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால், இதை சிறப்பிக்கும்விதமாக வருகிற 30 முதல் ஜனவரி 1ம் தேதி வரை 3 நாட்கள் தமிழக அரசின் சார்பில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 30-ம் தேதி மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் இந்த வெள்ளி விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
கண்ணாடி இழை பாலம்: அப்போது, ரூ.37 கோடி செலவில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்.
முன்னதாக, திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா ஆண்டு நிறைவையொட்டி சில வெள்ளி விழாப் பணிகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் என டிசம்பர் 12-ம் தேதி முதல்வர் அறிவித்திருந்ததுடன். அதற்காக ரூ.10.89 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
திருவள்ளுவர் சிலை: மேலும், பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் - ரீல்ஸ் - ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ள இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ளி விழாவில், திருக்குறள் நெறிபரப்பும் 25 தகைமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்குகிறார். மாலை 7 மணிக்கு, சுகி.சிவம் தலைமையில் "திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே - சமுதாயத்துக்கே" எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மறுநாள் டிசம்பர் 31-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், அய்யன் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
பரிசுகள்: திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலரை வெளியிட்டு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை நிகழ்த்துகிறார்.
தொடர்ந்து, பியானோ இசைக் கலைஞர் செல்வன் லிடியன் நாதஸ்வரத்தின் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை பல்வேறு கலைஞர்கள் பங்குபெறும் அரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 1.1.2025 புதன்கிழமை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, திருக்குறள் ஓவியக் கண்காட்சியைத் திறந்துவைத்து நினைவுப் பரிசுகள் வழங்குகிறார்.
பந்தல் ஏற்பாடு: கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.. இதற்காக பந்தல் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.. 10,000 பேருக்கு மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications