Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாண மண்டப உரிமையாளர்களுக்கு கன்னியாகுமரி கலெக்டர் அழகு மீனா முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் சுபநிகழ்ச்சிகள் என்ற பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருட்கள் வழங்குவது, வேட்டி, சேலை, மதுபாட்டில்கள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது தெரியவந்தால் அதை உடனடியாக தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த ஞாயிறு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் அச்சகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளின் உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் கலெக்டருமான அழகுமீனா தலைமையில் நடந்தது.

Kanyakumari Collector Alagumeena

இக்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கவிதா (பொது), ரோஷன் பேகம் (தேர்தல்), உதவி மேலாளர் (குற்றவியல்) தாஜூநிஷா, தேர்தல் தனி தாசில்தார் வினோத் மற்றும் அச்சகம் மற்றும் திருமண மண்டபம் மற்றும் கூட்ட அரங்கு உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா அவர்களிடம் பேசும் போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளரும் வெளியூரில் இருந்து வரும் நபர்களை குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மிகாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு தங்க அனுமதிக்க வேண்டும். கல்யாண மண்டபம் மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளை தவிர வேறு எந்த அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடத்த பதிவு செய்யப்பட்டால், அதன் விவரத்தை முன்கூட்டியே தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் சுபநிகழ்ச்சிகள் என்ற பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருட்கள் வழங்குவது, வேட்டி, சேலை, மதுபாட்டில்கள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது தெரியவந்தால் அதை உடனடியாக தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேர்தல் நடைபெறும் காலங்களில் விடுதிகளில் தங்க அனுமதி கோரும் நபர்களிடம் ஆதார் (அல்லது) புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த அனுமதி ஏதேனும் பெறப்பட்டிருப்பின் கூட்டம் முடிவுற்றதும் பதாகைகள், கட்சி கொடிகள், விளம்பரங்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். வாக்கு சேகரிக்கும் நோக்கில் பரிசுப்பொருட்கள், உபகரணங்கள் எதுவும் மண்டபத்தினுள் வைக்க அனுமதிக்க கூடாது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அச்சகங்களில் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவை அச்சடிக்கும் நேர்வுகளில் அரசியல் கட்சிகள் பெயர், எண்ணிக்கை ஆகிய விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அச்சடிக்கப்படும் சுவரொட்டிகள், கைப்பிரதிகள், விளம்பர பேனர் போன்றவற்றில் அச்சகத்தின் பெயர் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்" இவ்வாறு கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+