கன்னியாகுமரி மீனவர்களுக்கு குட்நியூஸ்.. எரிபொருள் செலவு 50 சதவீதம் குறையும்.. கலெக்டர் விளக்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பசுமை கடல்வளம் திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்று கலெக்டர் அழகுமீனா கூறினார். மண்ணெண்ணெய் இயந்திரங்களுக்குப் பதில் எல்.பி.ஜி கிட் பொருத்தும் இந்த திட்டத்திற்கு ₹1.90 கோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மீனவர்களுக்கு 50% வரை எரிபொருள் செலவு குறையும் என்று கலெக்டர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய மீன்பிடி நாட்டுப்படகுகள் பெரும்பாலும் மண்ணெண்ணெய்யில் இயங்கும் வெளிப்புற மோட்டார் எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றன. தற்போது 4,404 மண்ணெண்ணெய் எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு மாதம் ஒன்றிற்கு 13 லட்சத்து 77 ஆயிரத்து 185 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் குறைந்தபட்சமாக 1 கோடியே 62 லட்சத்து 94 ஆயிரத்து 800 லிட்டர் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. படகு ஒன்றிற்கு ஒரு ஆண்டுக்கு 3,700 லிட்டர் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றிற்கு 25 ரூபாய் எனும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனால் செலவுகள் அதிகமாவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் மற்றும் கடல் மாசுபாட்டையும் அதிகரிக்கிறது.
எனவே மீன்பிடித்தலில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுத்தமான எரிபொருளாக திரவ எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுப்படகுகளில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் எந்திரங்களை எல்.பி.ஜி. எரிபொருள் மாற்று உபகரணம் (கிட்) பொருத்தப்பட்ட எந்திரங்களாக அல்லது புதிய எல்.பி.ஜி. எந்திரங்களாக மாற்றுவதற்கான முன்னோடி திட்டமான பசுமை கடல்வளம் திட்டத்தினை ரூ.1.90 கோடியில் செயல்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பசுமை கடல்வளம் திட்டத்தின் மூலம் மீன்பிடி எரிபொருளாக திரவ எரிவாயு பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கடலிலும், சுற்றுச்சூழலிலும் கரியமில வாயு மாசுபாடு குறைந்து மீன் வளங்கள் பாதுகாக்கப்பட்டும். மேலும் மண்ணெண்ணெய்யை ஒப்பிடுகையில் திரவ எரிவாயு குறைந்த அளவு கரியமில வாயுவினை வெளியிடுவதால் காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும் உதவும். சுமார் 50 சதவீதம் வரை செலவு குறைவு ஏற்படும். இதன் மூலம் மீனவர்களின் எரிபொருள் செலவில் கணிசமான அளவில் குறைந்து சேமிப்பு அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை ஏற்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பசுமை கடல்வளம்" முன்னோடி திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மண்ணெண்ணெய்யால் இயங்கும் அனைத்து வெளிப்பொறுத்தும் எந்திரங்களையும் படிப்படியாக திரவ எரிபொருளுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு உருவாகும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications