Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு.. கல்வி நிறுவனங்கள் விஷயத்தில் கலெக்டர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: தற்போது பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேர இருக்கும் மாணவ, மாணவிகள், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் கல்வி இடங்களில் அரசு கல்லூரிகளில் சேர்ந்திட வேண்டும் என்றும் அங்கீகாரம் பெறாத உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேரக்கூடாது என்றும் கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் பெயர் பட்டியல் https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிளஸ் 2 முடித்த பலர் உயர் கல்வியில் சேர கல்லூரிகளை தேர்வு செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். வழக்கத்தைவிட இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர அதிகப்படியான மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல் நீட் தேர்விலும் ஏராளமானோர் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல் கலை பிரிவிலும் சேர ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவிகளை சேர வைக்க போட்டி போட்டு விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிகப்படியான கல்லூரிகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதா என்று கூறும் அளவிற்கு திரும்பிய பக்கம் எல்லாம் கல்லூரிகள் இருக்கிறது.

Kanyakumari Collector warns students who have completed Plus 2 regarding educational institutions

அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 49 சதவீதம் பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. இது அகில இந்திய சராசரியைவிட 2 மடங்கு அதிகம் ஆகும். இந்தியாவில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் அதிகம் பேர் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதேநேரம் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் சேர்ந்து ஏமாறக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் பல்வேறு கட்டங்களாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் உயர் கல்வியில் சேர்ந்த பல மாணவர்கள் அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தமையால், கல்வி உதவி வங்கி கடன், அரசின் உதவித்தொகை முறையே தமிழ்புதல்வன், புதுமைப்பெண் முதலானவற்றை கிடைக்க தகுதி பெறவில்லை.

தற்போது பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வியில் சேர இருக்கும் மாணவ, மாணவிகள், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் கல்வி இடங்களில் அரசு கல்லூரிகளில் சேர்ந்திட வேண்டும். அங்கீகாரம் பெறாத உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேரக்கூடாது.

அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் அளிக்கின்ற சான்றிதழ் அரசால் அங்கீகாரம் பெறப்படாதவை. அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் பெயர் பட்டியல் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தவிர பிற நிறுவனங்கள் அனைத்தும் அங்கீகாரம் பெறப்படாதவைகளே ஆகும். எனவே அங்கீகாரம் பெறப்படாத கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தை கேள்விகுறியாக்காமல் மாணவர்கள் செயல்பட வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+