கன்னியாகுமரியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு.. கல்வி நிறுவனங்கள் விஷயத்தில் கலெக்டர் வார்னிங்
நாகர்கோவில்: தற்போது பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேர இருக்கும் மாணவ, மாணவிகள், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் கல்வி இடங்களில் அரசு கல்லூரிகளில் சேர்ந்திட வேண்டும் என்றும் அங்கீகாரம் பெறாத உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேரக்கூடாது என்றும் கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் பெயர் பட்டியல் https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிளஸ் 2 முடித்த பலர் உயர் கல்வியில் சேர கல்லூரிகளை தேர்வு செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். வழக்கத்தைவிட இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர அதிகப்படியான மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல் நீட் தேர்விலும் ஏராளமானோர் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல் கலை பிரிவிலும் சேர ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவிகளை சேர வைக்க போட்டி போட்டு விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிகப்படியான கல்லூரிகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதா என்று கூறும் அளவிற்கு திரும்பிய பக்கம் எல்லாம் கல்லூரிகள் இருக்கிறது.

அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 49 சதவீதம் பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. இது அகில இந்திய சராசரியைவிட 2 மடங்கு அதிகம் ஆகும். இந்தியாவில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் அதிகம் பேர் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதேநேரம் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் சேர்ந்து ஏமாறக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் பல்வேறு கட்டங்களாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் உயர் கல்வியில் சேர்ந்த பல மாணவர்கள் அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தமையால், கல்வி உதவி வங்கி கடன், அரசின் உதவித்தொகை முறையே தமிழ்புதல்வன், புதுமைப்பெண் முதலானவற்றை கிடைக்க தகுதி பெறவில்லை.
தற்போது பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வியில் சேர இருக்கும் மாணவ, மாணவிகள், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் கல்வி இடங்களில் அரசு கல்லூரிகளில் சேர்ந்திட வேண்டும். அங்கீகாரம் பெறாத உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேரக்கூடாது.
அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் அளிக்கின்ற சான்றிதழ் அரசால் அங்கீகாரம் பெறப்படாதவை. அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் பெயர் பட்டியல் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தவிர பிற நிறுவனங்கள் அனைத்தும் அங்கீகாரம் பெறப்படாதவைகளே ஆகும். எனவே அங்கீகாரம் பெறப்படாத கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தை கேள்விகுறியாக்காமல் மாணவர்கள் செயல்பட வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications