கன்னியாகுமரி அருகே கேஸ் சிலிண்டர் குடோனில் கண்ட காட்சி.. முரட்டு சம்பவத்தால் பரபரப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூர் பகுதியில் பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ் சிலிண்டர் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தான் சுசீந்திரம் பகுதி மக்களுக்கு குறிப்பிட்ட பொதுத்துறை நிறுவனம் சமையல் கேஸ் சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. நேற்று காலை கேஸ் சிலிண்டர் குடோனில் இருந்த காட்சி அங்கிருந்தவர்களை பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது. ஏனெனில் ஏராளமான சிலிண்டர்களை காணவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூர் பகுதியில் பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ் ஏஜென்சி குடோன் உள்ளது. இங்கு ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்த 46 வயதாகும் கிருஷ்ணபிள்ளை என்பவர் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்த குடோனின் உள்ளே ஏராளமான கேஸ் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்படுவது வழக்கம். இங்கிருந்து தான் சுசீந்திரம் பகுதி மக்களுக்கு குறிப்பிட்ட பொதுத்துறை நிறுவனம் சமையல் கேஸ் சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம் ஆகும்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு பணிமுடிந்ததும் கிருஷ்ணபிள்ளை வழக்கம் போல் கேஸ் குடோனை பூட்டி விட்டு சென்றிருக்கிறார். மறுநாள் காலையில் அந்த வழியாக சிலர் நடந்து சென்ற போது குடோனின் கதவு திறந்த நிலையில் கிடந்ததை கண்டுள்ளனர். இதனை பார்த்த அவர்கள் உடனே பொதுத்துறை நிறுவன கேஸ் ஏஜென்சி மேலாளர் கிருஷ்ணப்பிள்ளைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணபிள்ளை சம்பவ இடத்துக்கு பதற்றத்துடன் விரைந்து வந்து பார்வையிட்டார், அப்போது ஏராளமான கேஸ் சிலிண்டர்கள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் குடோனின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த 14 கிலோ எடை உடைய 22 கேஸ் சிலிண்டர்கள் மற்றும் 10 கிலோ எடை உடைய ஒரு கேஸ் சிலிண்டரையும் திருடி விட்டு தப்பியதை கண்டுள்ளார் கிருஷ்ணபிள்ளை. இதையடுத்து அவர் இதுகுறித்து சுசீந்திரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார், விரைந்து வந்து கேஸ் குடோனில் விசாரணை நடத்தினர். அப்போது திருட்டு நடந்த குடோனில் இரவு காவலர் இல்லை என்பதும், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படவில்லை என்பதையும் கண்டனர். கேஸ் குடோனின் அருகே உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் மர்ம ஆசாமிகள் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? கேஸ் சிலிண்டர்களுடன் வாகனம் ஏதேனும் செல்கிறதா? என காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார். கேஸ் ஏஜென்சி குடோனில் புகுந்து 23 கேஸ் சிலிண்டர்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பாரத் கேஸ்.. சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியவில்லையா.. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications