Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி டூ சென்னை.. இன்ஸ்டாவில் பழகிய இளைஞரை நம்பி சென்ற கல்யாணமான பெண்.. இறுதியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: இன்றைக்கு இன்ஸ்டாகிராம் மோகம் பலருக்கும் அதிகம்..காலையில் எழுந்து கண் விழித்தால் ஸ்மார்ட் போனைத்தான் தேடுகிறார்கள். அவர்கள் ஸ்மார்ட்போனில் போய் பார்ப்பது இன்ஸ்டாகிராம் தான். ஒரு காலத்தில் பேஸ்புக் இருந்தது. இப்போது இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இன்ஸ்டாவில் பழகும் நபர்களை நம்பி வாழ்க்கையை தொலைப்பதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்ஸ்டாவில் பழகிய இளைஞரை நம்பி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சென்ற பெண், தன்னை காப்பாற்றும்படி தங்கையிடம் செல்போனில் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் யார் என்றே தெரியாத நபர்களின் கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி, அவர்களை காதலிப்பது இன்றைக்கு அதிகமாகவிட்டது. அதில் 15 வயது முதல் 25 வயது உள்ள பெண்கள், ஏமாறுவது அதிகமாக இருக்கிறது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் இளம் சிறுமிகள், காதல் என்ற பெயரில் சுற்றுவது,இன்ஸ்டாவில் காதல் வலையில் சிக்கி, அவர்களின் காமத்திற்கு விருந்தாகி விடுகிறார்கள்.

Kanyakumari to Chennai A twist for a woman who trusted a young man she met on Instagram

இறுதியாக வாழ்க்கையை தொலைப்பது அதிகமாக நடக்கிறது. இந்த தவறுகளை இளம் சிறுமிகள் மட்டுமல்ல , இளம் பெண்களுமே செய்கிறார்கள். நம்பிக்கையாக பேசும் நபர்கள், ஆசை வார்த்தைகள் பேசும் நபர்கள், பணம் அதிகம் இருப்பது போல் காட்டி, கோடீஸ்வரனாக காட்டி ஏமாற்றுபவர்கள் இவர்கள நம்பி ஏமாறுவது அதிகமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரை நம்பி கன்னிகுமரியில் இருந்து சென்னைக்கு சென்ற இளம்பெண் பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறையை சேர்ந்த ஒரு பெண் கணவரை இழந்த நிலையில் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் 23 வயதுடைய மூத்த மகளை வாத்தியார்விளையை சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்

ஆனால் அந்த இளம் பெண் குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து மாமியாருடன் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அடிக்கடி செல்போனில் அதிக நேரம் பேசி வந்தாராம். இதனை இளம் பெண்ணின் தாயார் மற்றும் குடும்பத்தினர் கண்டித்தனர்.

இந்தநிலையில் திருமணமான இளம்பெண் கடந்த 8-ந் தேதி சென்னை செல்வதாக கூறி சென்றார். மறுநாள் தனது தங்கைக்கு போன் செய்து தன்னை காப்பாற்ற வேண்டும் என கூறி கதறி அழுதாராம். அதன்பின்பு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த இளம்பெண்ணுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நினைத்து தாயார் நேசமணி போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண் செல்போனில் காப்பாற்ற வேண்டும் என பேசியிருப்பதால் அவரை மர்மநபர்கள் கடத்தினார்களா? அல்லது அவருக்கு வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞரை நம்பி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சென்ற இளம்பெண்ணின் கதி என்னவென்று தெரியாததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதுபோன்ற செய்திகளில் இருந்து இளம் சிறுமிகள் பாடம் கற்க வேண்டும். இதுபோன்ற காதல் வலையில் விழுந்து ஏமாறக்கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+