கன்னியாகுமரி இளைஞர் மதுவுக்கு அடிமை.. திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இப்படியும் செய்வார்களா?
கன்னியாகுமரி: கடந்த ஜனவரி 25-ந்தேதி திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், கொல்லம் செல்வதற்காக காத்திருந்தார். அவர் தனது கை பையில் 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை வைத்திருந்தார். இந்நிலையில் மதுவிற்கு அடிமையான கன்னியாகுமரி இளைஞர், திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் பயணியிடம் நகை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரளாவில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் மிகவும் முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த ஜனவரி 25-ந்தேதி திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். கொல்லம் செல்வதற்காக ரயிலி ஏறக் காத்திருந்தார். அவரது கையில் இருந்த பையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை வைத்திருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி , கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணிடம் இருந்த கை பையை திருடி விட்டு தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது பற்றி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ரயில்வே குற்றப்பிரிவு சிறப்பு போலீசாரும், நிலைய ரயில்வே போலீசாரும் அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் பதிவாகி இருந்த மர்ம நபரை தீவிரமாக தேடினார்கள். இதுபற்றி அண்டை மாநிலமான தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்ட போலீசிடம் போலீசார் கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து கை பையுடன் வெளியேறிய நபர், கடந்த 2 தினங்களுக்கு முன் தம்பானூர் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் படியாக சுற்றி வருவது தெரியவந்தது. ரயில்வே குற்றப்பிரிவு சிறப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவர், குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த சியாம் கிறிஸ்பின்(வயது 42) என்பதும், சம்பவத்தன்று ரயில் நிலையத்தில் பெண்ணிடம் இருந்த கை பையை திருடியதும், அதில் இருந்த நகைகளை நெடுமங்காடு வாண்டா பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலை அருகே மறைத்து வைத்து இருப்பதாக கூறியிருக்கிறார். உடனே போலீசார் அங்கு சென்று, புதைத்து வைத்து இருந்த நகைகளை மீட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் சியாம் கிறிஸ்பினை கைது செய்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி திருவனந்தபுரம் போலீசார் கூறும் போது, சியாம் கிறிஸ்பின் மதுவுக்கு அடிமையானவர் , வேலைக்கு செல்லாததால் மது குடிப்பதற்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் வேறு சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
டன் டனாக கொட்டி கிடக்கும் தங்க புதையல்.. ஆனாலும் KGF மூடப்பட்டது ஏன் தெரியுமா! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications