Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

kumari: குமரி இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமியார் செய்த செயல்.. கல்யாணம் ஆன 2 வருஷத்திலேயே இப்படியா ஆகனும்

Subscribe to Oneindia Tamil

குமரி: 25 வயதே ஆன இளம்பெண் சிந்து எடுத்த விபரீத முடிவு குமரி மாவட்டத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மத்திய போலீஸ் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் இவரது கணவர் மற்றும் தாய் செய்த கொடுமையின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக சிந்துவின் தந்தை கண்ணீர் மல்க போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதன்பேரில் சிந்துவின் கணவர், மாமியார் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் அனில். இவர் மத்திய போலீஸ் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிந்து (வயது 25). அனில் சிந்து தம்பதிக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

kumari-mother-in-law-s-harassment-young-woman-ends-life-in-kanyakumari-husband-arrested

மாமியார் கொடுமை தான் காரணம்

கணவர் அனில் உடன் அவரது தாய் கலா மற்றும் சகோதரர் அனு வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி வீட்டில் இருந்த சிந்து திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனையில் அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து சிந்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குமரி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகள் விஷம் குடித்து உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத அவரது தந்தை சுரேஷ் குமார் இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவித்தார். அந்த புகாரில் மாமியார் கொடுமையால் தான் எனது மகள் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறியிருந்தார்.

மாமியார், கணவர் உள்பட 3 பேர் கைது

அவர் போலீசில் கொடுத்த மனுவில், எனது மகள் சிந்துவுக்கும், அனிலுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு அவரது மாமியார் கலா மற்றும் கணவர் அனிலின் சகோதரர் அனு ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால், கடும் மன உளைச்சலில் இருந்து வந்த எனது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே என் மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் சிந்துவின் கணவர் அனில், அவரது தாயார் கலா, அனிலின் சகோதரர் அனு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட சிந்துவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் தான் ஆவதால் பத்மநாபபுரம் ஆர்டிஓ இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தற்கொலை தீர்வு அல்ல

சமீப நாட்களாகவே திருமணம் ஆன பெண்கள் வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை காரணமாக தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எந்த வித சம்பவத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்று போலீசார் விழிப்புணர்வு செய்தாலும் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

நீங்கள் இப்போது எதை எதிர்கொண்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதற்கு நிரந்தரமான தீர்வுகள் இருக்கின்றன. வாழ்க்கையில் இழப்பு வரும் நேரங்கள் சகஜம். ஆனால் அந்த நேரங்களை கடந்துவிட முடியும். உதவி கேட்பது தவறு அல்ல.

உங்களுக்கு அல்லது உங்களது அறிமுகத்தில் உள்ள ஒருவருக்கு மனஅழுத்தம், உளவியல் பிரச்சனைகள், அல்லது தற்கொலை எண்ணங்கள் வந்தால், தயங்காமல் நம்பிக்கையுடன் ஒரு நபரை அணுகுங்கள்.. தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+