Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாவ மன்னிப்பு கேட்ட பெண்கள்.. பாவம் செய்த பாதிரியார்! கன்னியாகுமரி ஆண்டோவுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: தேவாலயத்துக்கு வரும் பெண்கள், கல்லூரி மாணவிகளை மயக்கி ஆபாசமாக வீடியோகால் பேசி அதை பணம் கேட்டு மிரட்டிய பாதிரியார் பெனெடிக் ஆண்டோவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நீதிமன்றம் அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து உள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் பெனெடிக் ஆண்டோ. கடந்த மாதம் அவரை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு அவரது லேப்டாப்பை திருடிவிட்டு சென்றனர். இந்த நிலையில் அந்த பாதிரியார் பல பெண்களுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

One day police custody for Kanyakumari Priest after leak of sex videos

திருடப்பட்ட லேப்டாப்பில் இருந்த வீடியோக்களும், புகைப்படங்களுமே சமூக வலைதளங்களில் கசியவிடப்பட்டது தெரியவந்தது. தேவாலயத்திற்கு பாவ மன்னிப்பு கேட்டு வரும் பெண்களுடன் அன்பாக பேசி அவர்களின் செல்போன் எண்களை வாங்கிய பாதிரியார் ஆண்டோ அவர்களிடம் தொடர்ந்து பேசி தன்வசப்படுத்தி இருக்கிறார். அதன் பின்னர் அவர்களிடம் வாட்ஸ் ஆப் மூலமாக பேசத் தொடங்கிய பாதிரியார், பெண்களிடம் அடுத்தடுத்த நாட்களில் ஆபாசமாக பேச தொடங்கி இருக்கிறார்.

One day police custody for Kanyakumari Priest after leak of sex videos

ஆபாச வீடியோக்கள்: அதனை தொடர்ந்து வீடியோ கால் மூலமாக பெண்களிடம் பேசியுள்ளார் பெனெடிக் ஆண்டோ. இவர் பெரும்பாலும் பேசிய கல்லூரி மாணவிகள்தான் என்கிறார்கள். அவரது பேச்சில் மயங்கி சில பெண்களிடம் பாதிரியார் ஆண்டோ நிர்வாணமாக வீடியோ கால் பேசி அதை ரெக்கார்ட் செய்தும் வைத்து உள்ளார். அதேபோல் பெண்களிடம் பாதிரியார் நேரிலும் தவறாக நடந்துகொண்டதாகவும், ரகசியமாக பதிவு செய்து வைத்த ஆபாச வீடியோக்களை காட்டி பணம் கேட்பதாகவும் புகார்கள் எழுந்தன.

பாலியல் புகார்: இதனால் அஞ்சிய பெண்கள் பணத்தை கொடுத்தும் ஏமாற்றப்பட்டு உள்ளதாக புகார்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து தங்களின் விபரங்களை வழங்க வேண்டும் எனவும் அவர்களின் ரகசியத்தை காப்பதாகவும் போலீசார் அறிவுறுத்தினர். இந்த நிலையில்தான், இந்த நிலையில்தான் பாதிரியார் பென்னடிக் ஆண்டோ மீது நர்சிங் மாணவி ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். 18 வயதான நர்சிங் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ மீது நாகர்கோயில் சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

One day police custody for Kanyakumari Priest after leak of sex videos

ஒருநாள் போலீஸ் காவல்: இந்த நிலையில் வீடியோக்கள் கசிந்ததால் தலைமறைவான பாதிரியாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த மேலும் ஒரு பெண் புகாரளித்து இருந்தார். இந்த நிலையில் இன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+