‛‛6 அறைகள் + கிரானைட் சுவர்கள்’’.. மோடி தியானம் செய்யும் விவேகானந்தர் மண்டபத்தின் வசதிகள் இதுதான்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்துக்கு வந்துள்ளார். இங்கு 45 மணிநேரம் தியானம் செய்யும் பிரதமர் மோடி நாளை மறுநாள் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில் தான் விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு:

லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று முதல் நாளை மறுநாள் பிற்பகல் வரை தங்க உள்ளார்.

Narendra Modi Kanniyakumari Tamil Nadu

இந்த சமயத்தில் பிரதமர் மோடி 45 மணிநேரம் தியானம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் தியானம் செய்யும் விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள சிறப்பம்சங்களின் விபரம் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி.. இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் சந்திக்கும் இடமாக உள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள இந்த கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தருடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இதனால் தான் கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே சுவாமி விவேகானந்தருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவேகானந்தருக்கு நினைவிடம் அமைத்ததன் பின்னணியில் முக்கிய வரலாற்று நிகழ்வு உள்ளது.

அதாவது சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கா உலக ஆன்மீக மாநாட்டு பேச்சு என்பது மிகவும் பிரபலம். ‛மை டியர் சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ்' என 1893ம் ஆண்டில் அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் பேசுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் தியானம் செய்தார். 1982 டிசம்பரில் விவேகானந்தர் கன்னியாகுமரி கடலில் நீந்தி அங்குள்ள பாறைக்கு சென்று தியானம் செய்து பாரத மாதாவை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் நினைவாக அந்த பாறையில் விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது.

இந்த நினைவு மண்டபம் கட்டும் யோசனையை கூறியவர் ஆன்மீக தலைவரான ஏக்நாத் ரானே. அதன்பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் பணி 1964ல் தொடங்கி 1970ல் முடிவடைந்தது. இங்கு 2 முக்கிய கட்டுமானம் உள்ளது. ஒன்று விவேகானந்தர் மண்டம். இன்னொன்று ஸ்ரீபாத மண்டபம். ஸ்ரீபாத மண்டபத்தை பொறுத்தவரை இந்து தெய்வமான பகவதி அம்மன் கால் பதித்த இடத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் 'கர்ப்ப கிரகம்' (சன்னதி), 'உள் பிரகாரம்', வெளிப்பிரகாரம் உள்ளது.

அதேவேளையில் விவேகானந்தர் மண்டபம் என்பது தியான மண்டபம், முக பண்டபம், சபா மண்டபம் உள்ளடக்கி உள்ளது. இதில் 'தியான மண்டபத்தின்' வடிவமைப்பு இந்தியாவின் பல்வேறு கோவில்களின் கட்டமைப்புகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இந்த மண்டபம் 6 அறைகளை கொண்டுள்ளது. கடல் காற்றில் சிதிலமைடையாமல் இருக்கும் வகையிலான கிரானைட் சுவர்களால் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மண்டபத்தின் உள்ளே நல்ல காற்றோட்டம் கிடைக்கும். விளக்குகள் உள்ளன. அதேபோல் 'சபா மண்டபத்தில் 'பிரலிமா மண்டபம்' எனும் இடத்தில் விவேகானந்தர் சிலை உள்ளது. இங்குள்ள சுவாமி விவேகானந்தரின் பார்வை நேரடியாக ஸ்ரீபாத மண்டபத்தை நோக்கி இருக்கும். இந்த ஸ்ரீபாத மண்டபத்தில் பகவதி அம்மன் கால்பதித்த இடம் உள்ளது.

பொதுவாக விவேகானந்தர் மண்டபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட யாருக்கும் தங்க அனுமதி இல்லை. விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க செல்லும் மக்கள் மாலையில் கரைக்கு திரும்ப வேண்டும். ஆனால் பிரதமர் மோடி இன்று முதல் நாளை மறுநாள் வரை விவேகானந்தர் மண்டபத்தில் தங்கி தியானம் செய்கிறார். பிரதமர் மோடியின் வருகைக்காக அவருக்காக சில முக்கிய பொருட்கள் விவேகானந்தர் மண்டபத்துக்கு முன்கூட்டியே வாங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+