பூட்டியே கிடந்த ஏடிஎம் மையத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள்.. குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக செயல்படாமல் பூட்டி கிடந்த இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏ.டி.எம் சேவை மையத்திற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில் இயங்கி வருகிறது இந்தியன் ஓவர்சியஸ் வங்கியின் ஏ.டி.எம் சேவை மையம் இந்த ஏ.டி.எம் மையத்தின் மூலம் மேக்காமண்டபம், வேர்கிளம்பி, மணலிக்கரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஒரிரு வாரங்களிலேயே இந்த ஏ.டி.எம் சேவை மையம் பூட்டப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாகவே செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பல கிலோ மீட்டர் பயணித்து தக்கலை, அழகியமண்டபம் பகுதிக்கு சென்று பணம் எடுக்கும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளதால் இந்த ஏ.டி.எம் சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரினர். பொதுமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் சார்பில் இந்தியன் ஓவர்சியஸ் வங்கி கிளை மேலாளருக்கு பல முறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் செயல்படாமல் பூட்டி கிடந்த இந்தியன் ஓவர்சியஸ் வங்கி ஏ.டி.எம் சேவை மையத்திற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஏ.டி.எம் சேவை மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்தியன் ஓவர்சியஸ் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைள் எழுந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications