தமிழகத்திற்கு ஸ்டாலின் தலைமைதான் தேவை.. அதுதான் காலத்தின் கட்டாயம்.. சொல்கிறார் நாஞ்சில் சம்பத்
கன்னியாகுமரி: தமிழகத்திற்கு இனி ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் தேவை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்தை அதிமுகவில் துணை கொள்கை பரப்புச்செயலாளர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் அவரது மரணத்திற்கு சசிகலா தரப்புதான் காரணம் என குற்றம்சாட்டினார்.
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே சசிகலா தரப்புக்கு ஆதரவாக பேசிய நாஞ்சில் சம்பத், தினகரன் அணியில் சேர்ந்தார். பின்னர் கட்சி தொடர்பான கருத்து வேறுபாட்டால் தினகரனிடம் இருந்து விலகினார்.

செய்தியாளர் சந்திப்பு
இதைத்தொடர்ந்து எந்தக்கட்சியிலும் சேராமல் அமைதியாக இருந்த நாஞ்சில் சம்பத் லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார்.

தேர்தல் மூலம் பதில்
அப்போது தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொண்ட மக்கள் விரோத திட்டங்களுக்கு தேர்தல் மூலம் பதில் கூறியுள்ளனர் என்றார்.

தேர்தல் கணக்கு தோற்றது
நீட், மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்றவற்றை மனதில் வைத்து மக்கள் பாஜகவை தூக்கியெறிந்துள்ளனர். தமிழகத்தில் பாஜக போட்ட தேர்தல் கணக்கு தோல்வியடைந்துவிட்டது.

கூட்டணி வைத்தன் பலன்
தமிழக வாக்காளர்களை போல இந்திய வாக்காளர்கள் அனைவரும் இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணிவைத்தற்கான பலனை தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் அனுபவித்து வருகின்றன.

ஸ்டாலின் ஆட்சிதான் தேவை
தமிழகத்திற்கு இனி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான் தேவை அது காலத்தின் கட்டாயம் யாரும் எதுவும் செய்யமுடியாது. திமுகவின் கொள்கையும் மதிமுகவின் கொள்கையும் ஒன்றுதான். ஆகையால் வைகோ திமுகவுடன் மீண்டும் இணைந்து தமிழகத்திற்காக பணியாற்ற வேண்டும். இவ்வாறு வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications