Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேய் அரிகொம்பன்! என்னா பவ்யம்டா! பச்சபுள்ளமாதிரி தூங்குறியே.. நீதானா அது.. நம்பவே முடியலையே!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கேரளா, தமிழ்நாடு என இரு மாநிலங்களை மிரட்டிக் கொண்டிருந்த அரிகொம்பன் யானை களக்காடு வனப் பகுதியில் ஏதுமறியாத குழந்தை போல படுத்துறங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அரி கொம்பன் எனும் அரிசி கொம்பனாகிய நான்... இப்படித்தான் கேரளாவில் பொதுமக்களை தெறிக்க தெறிக்க ஓடவிட்டான் அரிகொம்பன் யானை. அரிகொம்பன் சாருக்கு அப்படி என்னதான் கோபமோ மனிதர்களைக் கண்டால்.. பார்த்தாலே தூக்கி போட்டு மிதிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் அய்யா.. அரிகொம்பன் அடித்த அடியில் இதுவரை 10 பேர் மரணம் அடைந்து போயிருக்கின்றனர். அதாவது அரிகொம்பன் தூக்கி மிதித்தது 10 பேரை மட்டுமல்ல.. 10 குடும்பங்களின் எதிர்காலத்தையும் நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் துரை.

Tusker Arikomban New Video- Sleeping like baby in rolling grasslands

இதனால் கேரளா வனத்துறையினர் அரிகொம்பன் யானையை தேடி பிடித்து கண்டுபிடித்து தேக்கடி வனப்பகுதிதியில் இறக்கிவிட்டனார். ஆனால் அடங்காத அரிகொம்பன், அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டுக்குள் களமிறங்கிவிட்டார். அப்புறம் என்ன அல்லோகலப்பட்டுவிட்டது தமிழ்நாடு எல்லை!

கம்பம் நகருக்குள் சில நாட்களாக அண்ணன் அரிகொம்பனார் வீதி உலா நடத்தினார். அய்யா ஊர்வலம் போகும் போது மக்கள் எம்மாத்திரம்.. அதனால் அரசாங்கமே 144 தடை உத்தரவு போட்டு வீட்டுக்குள் மக்களை முடக்கி பாதுகாக்க வேண்டிய நிலைமை எல்லாம் ஏற்பட்டது. ஒரு வார காலம் தேனி, கம்பம் சுற்றுவட்டார மக்களை திராட்டில் ஓடவிட்டவர் அரிகொம்பன். ஒருகட்டத்தில் மயக்க ஊசியில் சிக்கி வனத்துறையின் பிடிக்கு வந்துவிட்டது அரிகொம்பன்.

Tusker Arikomban New Video- Sleeping like baby in rolling grasslands

இங்கிருந்துதான் கிளைமாக்ஸ்.. அதுவரை வில்லனாக வலம் வந்த அரிகொம்பன் அண்ணன். பின்னர் பரமசாதுவாகிப் போனார். அரிகொம்பன் யானையை களக்காடு வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர் வனத்துறையினர். ஆனால் அரிகொம்பனை எங்கள் பகுதிக்குள் விடக் கூடாது என தமிழ்நாட்டு மக்கள் போராடினர். அதேநேரத்தில் கேரளாவின் மூணாறு சின்னக்கானல் வனப்பகுதி மக்களோ, அரிகொம்பனின் பூர்வீகம் இது.. இங்கே கொண்டு வந்துவிடுங்க என மறியல் போராட்டமே நடத்தினர்.

இப்படியான திடீர் ஹீரோவான அரிகொம்பன், இப்போது செய்யும் சேட்டைகள்தான் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 10 பேரை போட்டு மிதித்த அரிகொம்பன் தல இபோது அடங்கி ஒடுங்கி அமைதியானவராக் வலம் வருகிறார். புற்களை பிடுங்கி அப்படியே சாப்பிடாமல் ஓடை நீரில் கழுவிவிட்டு -அலசிவிட்டுதான் சாப்பிடுகிறார். இப்போது ஒரு புதிய வீடியோ வந்துள்ளது. களக்காடு வனப்பகுதியில் அவ்வளவு பவ்யமாக ஒரு குழந்தையை போல வனப்பகுதியில் அரிகொம்பன் உறங்கும் காட்சிதான் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அரிகொம்பனின் அடக்கத்தை பார்த்த உடனே, அடேய் அரிகொம்பன்! என்னா பவ்யம்டா! பச்சபுள்ளமாதிரி தூங்குறியே.. நீதானா அது.. நம்பவே முடியலையே! என கேட்காமலா இருக்க முடியும்!.. ம்ம்ம்.. நடக்கட்டும்! நடக்கட்டும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+