அடேய் அரிகொம்பன்! என்னா பவ்யம்டா! பச்சபுள்ளமாதிரி தூங்குறியே.. நீதானா அது.. நம்பவே முடியலையே!
கன்னியாகுமரி: கேரளா, தமிழ்நாடு என இரு மாநிலங்களை மிரட்டிக் கொண்டிருந்த அரிகொம்பன் யானை களக்காடு வனப் பகுதியில் ஏதுமறியாத குழந்தை போல படுத்துறங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அரி கொம்பன் எனும் அரிசி கொம்பனாகிய நான்... இப்படித்தான் கேரளாவில் பொதுமக்களை தெறிக்க தெறிக்க ஓடவிட்டான் அரிகொம்பன் யானை. அரிகொம்பன் சாருக்கு அப்படி என்னதான் கோபமோ மனிதர்களைக் கண்டால்.. பார்த்தாலே தூக்கி போட்டு மிதிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் அய்யா.. அரிகொம்பன் அடித்த அடியில் இதுவரை 10 பேர் மரணம் அடைந்து போயிருக்கின்றனர். அதாவது அரிகொம்பன் தூக்கி மிதித்தது 10 பேரை மட்டுமல்ல.. 10 குடும்பங்களின் எதிர்காலத்தையும் நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் துரை.

இதனால் கேரளா வனத்துறையினர் அரிகொம்பன் யானையை தேடி பிடித்து கண்டுபிடித்து தேக்கடி வனப்பகுதிதியில் இறக்கிவிட்டனார். ஆனால் அடங்காத அரிகொம்பன், அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டுக்குள் களமிறங்கிவிட்டார். அப்புறம் என்ன அல்லோகலப்பட்டுவிட்டது தமிழ்நாடு எல்லை!
கம்பம் நகருக்குள் சில நாட்களாக அண்ணன் அரிகொம்பனார் வீதி உலா நடத்தினார். அய்யா ஊர்வலம் போகும் போது மக்கள் எம்மாத்திரம்.. அதனால் அரசாங்கமே 144 தடை உத்தரவு போட்டு வீட்டுக்குள் மக்களை முடக்கி பாதுகாக்க வேண்டிய நிலைமை எல்லாம் ஏற்பட்டது. ஒரு வார காலம் தேனி, கம்பம் சுற்றுவட்டார மக்களை திராட்டில் ஓடவிட்டவர் அரிகொம்பன். ஒருகட்டத்தில் மயக்க ஊசியில் சிக்கி வனத்துறையின் பிடிக்கு வந்துவிட்டது அரிகொம்பன்.

இங்கிருந்துதான் கிளைமாக்ஸ்.. அதுவரை வில்லனாக வலம் வந்த அரிகொம்பன் அண்ணன். பின்னர் பரமசாதுவாகிப் போனார். அரிகொம்பன் யானையை களக்காடு வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர் வனத்துறையினர். ஆனால் அரிகொம்பனை எங்கள் பகுதிக்குள் விடக் கூடாது என தமிழ்நாட்டு மக்கள் போராடினர். அதேநேரத்தில் கேரளாவின் மூணாறு சின்னக்கானல் வனப்பகுதி மக்களோ, அரிகொம்பனின் பூர்வீகம் இது.. இங்கே கொண்டு வந்துவிடுங்க என மறியல் போராட்டமே நடத்தினர்.
இப்படியான திடீர் ஹீரோவான அரிகொம்பன், இப்போது செய்யும் சேட்டைகள்தான் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 10 பேரை போட்டு மிதித்த அரிகொம்பன் தல இபோது அடங்கி ஒடுங்கி அமைதியானவராக் வலம் வருகிறார். புற்களை பிடுங்கி அப்படியே சாப்பிடாமல் ஓடை நீரில் கழுவிவிட்டு -அலசிவிட்டுதான் சாப்பிடுகிறார். இப்போது ஒரு புதிய வீடியோ வந்துள்ளது. களக்காடு வனப்பகுதியில் அவ்வளவு பவ்யமாக ஒரு குழந்தையை போல வனப்பகுதியில் அரிகொம்பன் உறங்கும் காட்சிதான் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
அரிகொம்பனின் அடக்கத்தை பார்த்த உடனே, அடேய் அரிகொம்பன்! என்னா பவ்யம்டா! பச்சபுள்ளமாதிரி தூங்குறியே.. நீதானா அது.. நம்பவே முடியலையே! என கேட்காமலா இருக்க முடியும்!.. ம்ம்ம்.. நடக்கட்டும்! நடக்கட்டும்!
Sleeping like a baby in rolling grasslands #Arikomban #TNForest @TNDIPRNEWS pic.twitter.com/xtOFtPGX1I
— Supriya Sahu IAS (@supriyasahuias) June 11, 2023
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications