முதலில் தொழில்... பிறகு அரசியல்... நிதானமாக அடியெடுத்து வைக்கும் வசந்தகுமார் மகன்..!
கன்னியாகுமரி: மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முழு நேர அரசியலுக்கு வருவதற்கு முன் தனது தந்தை கட்டிக்காத்து வந்த தொழில் சாம்ராஜ்யத்தில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறார்.
வசந்தகுமாரின் 16-ம் நாள் காரியத்துக்காக கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ள விஜய்வசந்தை கட்சியினரும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் தொடர்ந்து சந்தித்து பேசி வருகின்றனர்.
அவர்களிடத்தில் பேசும் விஜய் வசந்த், தம்மை பொறுத்தவரை முதலில் தொழில் பிறகு தான் அரசியல் எனக் கூறி வருகிறாராம்.

வசந்தகுமார்
தமிழகத்தின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரும் கன்னியாகுமரி தொகுதியின் எம்.பியாக இருந்தவருமான வசந்தகுமார் கடந்த மாதம் 28-ம் தேதி காலமானார். இதையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

மனதில் என்ன?
அரசியலா? தொழிலா? என்ற குழப்பத்தில் இருந்து வந்த விஜய் வசந்த் முதலில் தொழிலில் கவனம் செலுத்துவது என்றும் பிறகு அரசியலை பார்த்துக்கொள்ளலாம் எனவும் முடிவெடுத்திருக்கிறார். தமிழகம், கேரளா, என 70-க்கும் மேற்பட்ட வசந்த் அன் கோ ஷோரூம்கள் உள்ள நிலையில் அவற்றின் கணக்கு வழக்குகளை முழுநேரமாக கவனித்து தனது தந்தை கட்டமைத்த தொழில் சாம்ராஜ்யத்தை இன்னும் பரவலாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறாராம்.

அப்பாவின் அறிவுரை
வசந்தகுமார் உயிருடன் இருந்தபோது தமது இரண்டு மகன்களுக்கும் அவர் அடிக்கடி கூறிய அறிவுரைகள், ''தொழில் இருந்தால் தான் எல்லாம், அது இல்லை என்றால் யாரும் மதிக்கமாட்டார்கள், அதனால் தொழில் மீதான கவனத்தை சிதறவிடாதீர்கள்'' என்பது தான். தற்போது தந்தையின் அறிவுரைக்கேற்ப விஜய் வசந்தின் முடிவுகள் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

என்ன பேசினார்?
விஜய் வசந்திற்கு மிகவும் நெருக்கமான நாடார் சங்க பிரமுகர் ஒருவரிடம் நாம் பேசிய போது அவர் கூறியதாவது, '' அண்ணாச்சி இடத்தை நிச்சயம் விஜய் வசந்த் நிரப்புவார். ஆனால் எங்களிடம் பேசியதை வைத்து பார்த்தால் தொழிலுக்கு முன்னுரிமை தர விருப்பப்படுகிறார் எனத் தோன்றுகிறது. அதற்காக அவர் அரசியலுக்கு வரமாட்டார் என நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். காங்கிரஸ் மேலிடத்திற்கு அண்ணாச்சிக்கு இங்குள்ள செல்வாக்கு பற்றி நல்லா தெரியும். அதனால் அவர் மகனுக்கு தான் எப்படியும் வாய்ப்பு கொடுக்கும் என நம்புகிறோம்'' என்கிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications