கன்னியாகுமரி அருகே பிரபல பள்ளியில் இன்ஜினியர் இருந்த கோலம்.. ஆடிப்போன உறவினர்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள ஆரணிவிளையில் பள்ளிக்கூடம் நடத்தி வருபவர் சிட்னிசன் மோரிஸ். இவர் பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். இவருடைய மூத்த மகன் பெரில்சன் மோரிஸ் இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். இவர் பள்ளி வளாகத்தில் இருந்த கோலம் உறவினர்களையும் நண்பர்களையும் ஆடிப்போக வைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஆரணிவிளை என்ற கிராமம் அமைந்துள்ளது.இங்கு ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருபவர் சிட்னிசன் மோரிஸ். இவர் பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார. இவருடைய மூத்த மகன் பெரில்சன் மோரிஸ் (வயது 28), என்ஜினீயரிங் பட்டதாரி.

நேற்று முன்தினம் காலையில் சிட்னிசன் மோரிஸ் குடும்பத்தினர் ஆலயத்திற்கு செல்ல புறப்பட்டிருக்கிறார்கள். இதற்காக பெரில்சன் மோரிசை அழைத்த போது அவரை மட்டும் அங்கு காணவில்லை. பிறகு பெரில்சன் மோரிஸை தேடிய போது பள்ளி வளாகத்தில் ரத்த காயங்களுடன் அசைவற்று கிடந்தார். இதனை பார்த்ததும் துடிதுடித்து போன குடும்பத்தினர் கதறி அழுதார்கள்.
பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், பெரில்சன் மோரிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரில்சன் மோரிஸ் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளி கட்டிட மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இதுகுறித்து சிட்னிசன் மோரிஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பெரில்சன் மோரிஸ் சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. பள்ளி கட்டிடத்தில்இருந்து கீழே குதித்து இன்ஜினியர் உயிரைவிட்ட சம்பவம் குலசேகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications