கன்னியாகுமரியில் படிப்பை கைவிட்ட அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவி.. இப்படியுமா ஆகணும்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் அகஸ்தியர் காலனியைச் சேர்ந்த 15 வயதாகும் மீனாட்சி என்ற மாணவி அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் முதல் பள்ளிக்குச் செல்லவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தியது ஏன் என்று அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்தனர். அதன்பிறகு அந்த மாணவி எடுத்த முடிவு உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
இன்றைக்கு எந்த மாணவனும், மாணவியும் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. 10-ம் வகுப்புடன் கூட யாரையும் நிற்காமல் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்று அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உயர்கல்வி வரை பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது.

அதேநேரம் இன்றும் சில அரசு பள்ளி மாணவ, மாணவிகள், 9ம் வகுப்பு, 10ம் வகுப்பில் வரும் போது படிப்பை பாதியில் கைவிடுகிறார்கள். இதனை கவனித்து , அந்த மாணவ, மாணவிகளைமீண்டும் படிக்க வைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். அதற்காக அரசு அதிகாரிகள் நேரில் சென்று விசாரிப்பதும் வழக்கம். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் அகஸ்தியர் காலணியைச் சேர்ந்த 40 வயதாகும் வீரா என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளர் ஆவார். இவரது மனைவி கவிதாவிற்கு 35 வயது ஆகிறது.இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். இதில் மகள் மீனாட்சிக்கு 15 வயது ஆகிறது.இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் முதல் மாணவி பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து படிப்பை பாதியில் கைவிட்டது குறித்து விசாரிக்கும் அரசு குழுவினர் மாணவியின் வீட்டிற்கு சென்று ஏன் வரவில்லை என்று விசாரித்தனர்.
அதன்பிறகும் மாணவி பள்ளிக்கு போகவில்லை. இந்த விவகாரத்தில் மாணவி மனமுடைந்து காணப்பட்டார். நேற்று காலையில் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். சகோதரர்களும் வீட்டில் இல்லை.. மீனாட்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் மாணவியை பார்க்க கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒருவர் வந்துள்ளார். அவர் வீட்டின் வெளியே நின்று மாணவியை பெயரை சொல்லி அழைத்ள்ளார். ஆனால் எந்த பதிலும்வரவில்லை. உடனே மாணவியின் உறவினரிடம் வந்த அதிகாரி கூறியுள்ளார். இதையடுத்து அந்த உறவினர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மீனாட்சி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் உறவினர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக பெற்றோருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். ஆரல்வாய்மொழி போலீசார் நேரில் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் முடிவுக்கு என்ன காரணம் என்று விசாரித்து வருகிறதார்கள். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications