எஸ்.ஐ. வில்சன் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்- துப்பாக்கி கொடுத்த இஜாஸ் பாஷா கைது
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக கொலையாளிகளுக்கு துப்பாக்கியை கொடுத்த இஜாஸ் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக 6 நாட்களாக 40 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம், கேரளாவில் சந்தேக நபர்கள் பலரும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில் இஜாஸ் பாஷா என்கிற தீவிரவாதியை தமிழக போலீசார் கைது செய்தனர்.
இஜாஸ் பாஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வில்சன் கொலை பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கொலையாளிகளுக்கு தாமே துப்பாக்கியை சப்ளை செய்ததாக இஜாஸ் கூறியுள்ளார்.
அவரிடம் இருந்து துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இஜாஸ் பாஷாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications