மக்கள் கடல் அலையில் மிதக்கிறேன்! மனம் திறந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்! செந்தில் பாலாஜி ஹேப்பி!
கரூர்: கரூரில் தன்னை மக்கள் கடல் அலையில் மிதக்க வைத்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
செந்தில் பாலாஜியிடம் உள்ல ஆற்றலை அனைவரும் பெற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தன்னை அவர் நிரூபித்துக் கொண்டு வருவதாக ஸ்டாலின் ஒரேயடியாக போற்றி புகழ்ந்திருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு;

மக்கள் அலை
''பேசாமல் அப்படியே கொஞ்ச நேரம் நின்று கொண்டு உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் கடல் அலையை இங்கே நான் பார்க்கிறேன். கடல் இல்லாத இந்த கரூருக்கு, மக்கள் கடலையே உருவாக்கி இருக்கிறார் நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி. அலை இல்லாத கரூருக்குள் மக்கள் அலையை உருவாக்கி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.''

டார்கெட் செந்தில்பாலாஜி
''இங்கு மட்டுமல்ல, இந்த மாவட்டத்திற்குள்ளே நுழைந்ததில் இருந்தே நான் பார்க்கிறேன், பார்க்கும் இடமெல்லாம் மக்கள். எந்தப் பணியாக இருந்தாலும் அதற்கு ஒரு டார்கெட் நிர்ணயிப்பார். எந்தச் சூழலிலும் அந்த டார்கெட்டை முடித்துக் காட்டக் கூடியவர் என்று அவரை நான் ஏற்கனவே பலமுறை பாராட்டி இருக்கிறேன், வாழ்த்தியிருக்கிறேன். அவர் அமைச்சராக வருவதற்கு முன்பு, மின்சாரத்துறை எந்த நிலைமையில் இருந்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.''

கோவை மாவட்டம்
''மின்னகம் சேவை மையம், ஒரு லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு, 316 துணை மின் நிலையங்கள் என மாபெரும் சாதனைகளைச் செய்து அந்த துறையை மீட்டெடுத்து வருகிறார். அதே நேரத்தில், கரூர் மாவட்டத்தை மட்டுமல்ல, கோவை மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்று அந்த மாவட்டத்தையும் சேர்த்துக் கவனித்து, எங்கும் எந்தத் தொய்வும் இல்லாமல் அவர் செயல்பட்டு வருகிறார்.''

மக்கள் கடல்
''இத்தகைய ஆற்றலை அனைவரும் பெற வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு தன்னை அவர் நிரூபித்துக் கொண்டு வருகிறார். தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற வாழ்க்கை கருவான ஊர் இந்த கரூர் மாவட்டம். அமைச்சர் செந்தில்பாலாஜி என்னை மக்கள் கடல் அலையில் மிதக்க வைத்துள்ளார். நேற்று இரவிலிருந்து இந்த நிமிடம் வரையில். அதற்காக மீண்டும், மீண்டும் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ''
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications