’டார்கெட்டை’ எப்படியும் முடிச்சுருவார்! அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!
கரூர் : இதற்கு முன் இந்தியாவில் வேறு எந்த மாநில அரசுகளும் செய்யாத சாதனையை தமிழக அரசு செய்திருக்கிறது. இந்தச் சாதனையைத் தலைநிமிர்ந்து சொல்ல வைக்கக் காரணமாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை மனமார நான் பாராட்டுகிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தமிழக மின்சாரத்துறை சார்பில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக ஈரோட்டில் திருமண நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு கரூர் வந்த அவருக்கு அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி மேடை மாநாடு போல பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருந்ததோடு கொடிகள் தோரணங்கள் என மாஸ் காட்டி இருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதனால் மகிழ்ந்து போன முதல்வர் ஸ்டாலின் மேடையிலேயே அமைச்சர் செந்தில் பாலாஜி வெகுவாக புகழ்ந்தார்

முதல்வர் ஸ்டாலின்
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்," தமிழ்நாடு அரசின் சாதனை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கக் கூடிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கும் நாளாக இது அமைந்திருக்கிறது. ஏற்கனவே ஒரு லட்சம் இணைப்புகளைக் கொடுத்திருக்கிறோம். அத்துடன் சேர்த்து இன்று ஐம்பதாயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜி
மொத்தம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இணைப்புகளை பதினைந்து மாத காலத்தில் வழங்கி இருக்கிறோம் என்று சொன்னால் இதனை விட மகத்தான சாதனை இருக்க முடியாது. இதற்கு முன் எந்த அரசும் இத்தகைய சாதனையைச் செய்தது இல்லை. நம்முடைய அரசு தான் செய்து காட்டி இருக்கிறது. இதற்கு முன் இந்தியாவில் வேறு எந்த மாநில அரசுகளும் இத்தகைய சாதனையைச் செய்தது இல்லை.

டார்கெட்
நம்முடைய அரசு தான் செய்து காட்டி இருக்கிறது.இந்தச் சாதனையைத் தலைநிமிர்ந்து சொல்ல வைக்கக் காரணமாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை மனமார, நான் பாராட்டுகிறேன். அவரை முன்பு நடந்த நிகழ்ச்சிகளில் பாராட்டும் போது டார்க்கெட் வைத்து செயல்படுபவர் என்று நான் குறிப்பிட்டேன். தனக்கு ஒரு டார்க்கெட் வைத்துக் கொள்வார்- அந்த டார்க்கெட்டை எப்படியும் முடித்துக் காட்டுவார் செந்தில்பாலாஜி என்று நான் சொன்னேன்.

மனமார்ந்த நன்றி
நான் சொன்னது அன்று கூட சிலருக்கு புரியாமல் இருந்திருக்கலாம்.அவர்களுக்கும் இன்று புரிந்திருக்கும். ஒரு இலக்கை தனக்குத் தானே வைத்துக் கொண்டு - அந்த இலக்கை முடித்துக் காட்டுபவராக செந்தில்பாலாஜி தன்னை நிரூபித்துக் காட்டி இருக்கிறார். அவருக்குத் துணை நிற்கும் மின் துறை அதிகாரிகளுக்கும் - அலுவலர்களுக்கும் - நாட்டின் முதலமைச்சர் என்ற அடிப்படையில் மட்டுமல்ல- தமிழக விவசாயிகளின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications