சாலையோரம் காரை நிறுத்தியது தப்பாபோச்சு... சிக்கினார் போலி தாசில்தார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காரில் வலம் வந்த போலி தாசில்தார்-வீடியோ

    கரூர் : கரூர் அருகே வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலி தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார் .

    மதுரை ஒத்தைக்கடை பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு (35). இவர் நேற்று இரவு கருர் அடுத்த புன்னம்சத்திரம் ஓலப்பாளையம் அருகே சாலை ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு தூங்கியுள்ளார். அந்த கார் தமிழ்நாடு அரசு என்ற ஸ்டிக்கர் மற்றும் எம்பளத்துடன் கார் இருந்துள்ளது.

    Collection hunt, Fake Tashildar Arrested Near Karur

    நீண்ட நேரம் அந்த கார் அதே இடத்தில் நின்று இருந்ததை கண்ட ரோந்து போலீசார் காரில் இருந்தவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, காரில் இருந்த பழனிவேலு தான் ஒரு தாசில்தார் என கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் தாசில்தார் என கூறி ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.

    Collection hunt, Fake Tashildar Arrested Near Karur

    மேலும், இவர் மதுரை மாவட்டத்தில் தாசில்தார் வேன் ஓட்டுநராக தற்காலிக பணியில் இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து, காரை பறிமுதல் செய்த போலீசார் போலி தாசில்தார் பழனிவேலுவை கைது செய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+