"விக்னேஷ்வரி" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை!
ராகிங் கொடுமையால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்
கரூர்: விக்னேஷ் என்ற மாணவனை விக்னேஸ்வரி என்று சொல்லி ராகிங் செய்துள்ளனர் சீனியர்கள். இதனால் மனசு உடைஞ்சு போன விக்னேஸ்வரன் எலி மருந்தை சாப்பிட்டு விட்டார்!
கரூர் தாந்தோன்றி மலையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் லீவு முடிந்து இப்போதுதான் வகுப்புகள் தொடங்கியது.

முதலாமாண்டு வகுப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இதில் கரூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ், செல்வகுமார் இருவரும் சேர்ந்துள்ளனர்.
புதுசாக காலேஜ்-க்கு வந்ததால், அவர்களை 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிவசக்தி, நந்தகுமார் ராகிங் செய்துள்ளனர். குடிக்க தண்ணீர் கொண்டு வரும்படி ரேகிங் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விக்னேஷை, விக்னேஷ்வரி, விக்னேஷ்வரி என்று அனைவர் முன்னாடியும் கிண்டல் கேலி செய்துள்ளனர். இதனால் அவமானமும், மனவேதனையும் அடைந்த விக்னேஷ், எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். மயங்கி விழுந்து கிடந்த அவரை, அருகில் இருந்தோர், கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் விக்னேஷ் உள்ளார்.
இது குறித்து செல்வகுமார் தாந்தோன்றிமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சிவசக்தி, நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ராகிங் கொடுமையால் மாணவர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications