திமுகவினர் 100 பேர் நள்ளிரவில் வீடு புகுந்து என்னை மிரட்டுனாங்க.. கரூர் கலெக்டர் புகார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திமுகவினர் வீடு புகுந்து என்னை மிரட்டுனாங்க: கரூர் ஆட்சியர் புகார்- வீடியோ

    கரூர்: நள்ளிரவில் வீடு புகுந்து 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மிரட்டியதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை மறுநாள் தமிழகத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் இறுதிகட்ட பிரச்சாரத்திற்கு அனுமதிக்கவில்லையென திமுகவின் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    DMK members enter my house in midnight, and life threatening to my family : says karur collector anbazhagan

    இந்நிலையில் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கும் விவகாரம் தொடர்பாக திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்ட ஆடசியர் அன்பழகனை நள்ளிரவில் சந்திக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறிய கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், நள்ளிரவில் வீடு புகுந்து 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மிரட்டினார்கள் என குற்றம்சாட்டினார். மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அன்பழகன் வேதனை தெரிவித்தார்.

    தனது குடும்பத்தினருக்கு திமுகவினர் அச்சுறுத்தல் ஏற்படுத்தியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருப்பதாகவும் ஆட்சியர் அன்பழகன் கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+