மச்சினிச்சி வர்ற நேரம்.. போச்சு போச்சு சங்கீதாவை காணோம்.. கரூர் "மாமா"வும் மிஸ்ஸிங்.. பரிதாப மனைவி
கரூர்: தூத்துக்குடி கொலை சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், அடுத்த சம்பவம் கரூரில் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடத்தை சேர்ந்தவர் நம்பிராஜா.. இவரது மனைவி பெயர் செல்வதேவி.. ஆனால் நம்பிராஜா, திசையன்விளையில் உள்ள தன்னுடைய மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வாராம். அப்போதுதான், தன்னுடைய மச்சினிச்சி நீலவேணியிடம் நெருங்கி பழகியதாக தெரிகிறது... நீலவேணி பல் மருத்துவர் ஆவார்.

மருமகன்: மருமகன், தங்கள் மகளிடம் நெருங்கி பழகுவதை கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.. இதனால் நீலவேணியை கண்டித்திருக்கிறார்கள்.. எனினும், இருவரும் எதைப்பற்றியும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் 7 மாதங்களுக்கு முன்பு, நம்பிராஜாவும், நீலவேணியும் திடீரென மாயமாகிவிட்டார்கள்.. இதனால் பதறிப்போன நீலவேணி குடும்பத்தினர் வள்ளியூர் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, நீலவேணியை நம்பி ராஜா கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.
நீலவேணி: ஒரு வாரத்துக்கு முன்பு, மனைவி செல்வதேவிக்கு போன் செய்து பேசிய நம்பிராஜா, நீலவேணிக்கு உடம்பு சரியில்லை, ஆசாரிப்பள்ளம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்.. இதனால், நீலவேணியும், அவரது பெற்றோரும் பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அங்கு இருவருமே இல்லை.
எனவே மருத்துவமனை ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரித்தற்கு, நீலவேணி இறந்து விட்டதாகவும், சடலத்தை அவரது கணவர் என்று சொல்லிக்கொண்டு நம்பிராஜா வாங்கிச் சென்று மின்மயானத்தில் எரித்து விட்டதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீலவேணியின் தந்தை, நாகர்கோவில் மாவட்ட எஸ்.பியை சந்தித்து நம்பிராஜா மீது புகார் அளித்துள்ளார். ஆனால், அதற்குள் நம்பிராஜா தலைமறைவாகிவிட்டாராம்..
நீலவேணி எப்படி இறந்தார்? அவருக்கு என்ன ஆனது? என்றெல்லாம் தெரியவில்லை.. மச்சினிச்சியை கடத்தி சென்ற நம்பிராஜா பிடிபட்டால்தான் உண்மை தெரியவரும்.
சசிகலா: இதுபோலவே, கரூரிலும் ஒரு மச்சினிச்சி விவகாரம் வெடித்துள்ளது.. கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோரணக்கல்பட்டி அருகே உள்ளது பாரதி நகர்.. இங்கு வசித்து வரும் சசிகலா என்பவருக்கு 33 வயதாகிறது.. இவரது கணவர் அருண் பிரகாஷ் வயது 35.
இவர்கள் இருவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.. இந்நிலையில் சசிகலாவின் தங்கை சங்கீதா, அடிக்கடி தன்னுடைய அக்கா சசிகலா வீட்டுக்கு வருவாராம்.. சங்கீதாவுக்கு 29 வயதாகிறது..
நெருக்கம்: நாளடைவில் அருண்பிரகாஷுக்கும் சங்கீதாவுக்கும் நெருக்கம் அதிகமாகி தகாத உறவு இருந்து வந்துள்ளது என கூறப்படுகிறது... இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி காலை 11 மணியளவில், அருண்பிரகாஷ், சங்கீதா இருவரும் வெளியே சென்றார்களாம்.. ஆனால், இருவருமே வீடு திரும்பவில்லை.
அருண்பிரகாஷ் வழக்கம்போல் செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், அவரது நண்பர்களிடம் விசாரித்து பார்த்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதேபோல சங்கீதா குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவிலலை.
தொடர் விசாரணை: இதனால், தன்னுடைய கணவனையும், தங்கையையும் காணவில்லை என சசிகலா போலீசில் புகார் தந்துள்ளார்.. புகாரை பெற்றுக்கொண்ட தான்தோன்றிமலை காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, மாயமான 2 பேரையும் தேடி வருகிறார்களாம்..!!
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications