6 இடங்கள்! கரூரில் 2 நாள் அமலாக்கத்துறை சோதனை நிறைவு! செந்தில் பாலாஜி உதவியாளரிடம் சிக்கியது என்ன?
கரூர்: கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் உள்பட 3 பேரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் 2 நாட்களாக தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் அமலாக்கத்துறை சோதனை முடிவுக்கு வந்த நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிய நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்தாலும் கூட செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக உள்ளார். இதற்கிடையே அவரது தம்பி அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலம் காலஅவகாசம் கோரியுள்ளார்.
இதற்கிடையே தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் மீண்டும் சோதனையை நடத்தினர். நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் கரூரில் மொத்தம் 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
இந்த சோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர், "தனலட்சுமி செராமிக்ஸ்" என்ற பெயரில் டைல்ஸ் தொழில் செய்து வரும் குஜராத்தை சேர்ந்த பிரகாஷ், டையிங் நிறுவன உரிமையாளர் செந்தில் ஆகியோர் சிக்கினர். செந்தில் பாலாஜியின் உதவியாளராக உள்ள சங்கரின் வீடு, அலுவலகம், பிரகாசின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் நேற்று முன்தினம் தொடங்கிய சோதனை நேற்று மதியத்துடன் முடிவடைந்தது.
இதையடுத்து லக்கி டிரேடர்ஸ் என்ற அவரது டையிங் நிறுவன உரிமையாளர் செந்தில் வீடு, அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கரூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் சோதனை நடந்தது.
இந்த சோதனையும் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் கடந்த 2 நாட்களாக கரூர் மாவட்டத்தில் 6 இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. 2 நாட்களாக நடந்த இந்த சோதனையின் முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களின் வீடு, அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும் அந்த ஆவணங்கள் எந்த வகையை சேர்ந்தவை என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. தற்போது அமலாக்கத்துறை கைப்பற்றிய இந்த ஆவணங்களை ஆராய உள்ளனர். தேவை என்றால் அதுபற்றி விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் அவர்களை அழைக்கவும் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications