கலர் கலராக ரீல் விட்டு பண மோசடி செய்த டிவன்காந்த்.. குண்டாஸில் உள்ளே போட்ட போலீஸ்!
கரூரில் மோசடி பேர்வழி டிவன் காந்த்தை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்
கரூர்: ஊருக்குள்ள கலர் கலர் ரீலாக அவிழ்த்துவிட்டு, மக்களை ஏமாற்றி சொகுசாக வாழ்ந்து வந்த டிவன் காந்த்தை தூக்கி குண்டர் சட்டத்தில் அடைத்து விட்டனர்.
கரூர் வணிக வரி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தவர்தான் டிவன் காந்த். தமிழ்நாடு அரசு அலுவலர்கள் எஸ்சி எஸ்டி சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வந்தார். வயசு 39.

ஒழுங்கா வேலை பார்த்துட்டு இருந்தவர் என்ன நினைச்சாரோ தெரியவில்லை, 2 வருஷத்துக்கு முன்னாடி திடீரென கோக்குமாக்கு வேலைகளில் இறங்கி விட்டார்.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டார். இதன் பலன், ஒரு பெரிய பங்களா கட்டிவிட்டார். வீட்டு முன்னாடி நிறைய சொகுசு கார்களையும் வாங்கி நிறுத்திவிட்டார்.
ஆனால் இன்னும் ஒருத்தருக்கும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது கரூர் போலீஸ் ஸ்டேஷன் வரை வந்து புகார் தரவும்தான் டிவன் காந்த் வசமாக சிக்கினார்.
அப்போதுதான் இவரது கார்களை பார்த்த போலீசார் அரண்டு போய்விட்டனர். எல்லாம் சொகுசு கார்கள், ஒவ்வொரு காருக்கு முன்னாடியும், ரெட் கலரில் பெயர்பலகையை தொங்க விட்டுள்ளார். இது எல்லாவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், டிவன்காந்தையும் புடிச்சி ஜெயிலில் போட்டார்கள். இப்போது, மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் டிவன் காந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications