Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியா விப்பீங்க?...தட்டிக்கேட்ட மூத்த ‘குடி’ மகனுக்கு அடி உதை...டாஸ்மாக் அட்டூழியம்

Subscribe to Oneindia Tamil

கரூர் : கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை கேட்பதை தட்டிக்கேட்ட முதியவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார்கள் டாஸ்மாக் கடை ஊழியர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Recommended Video

    இப்படியா விப்பீங்க?...தட்டிக்கேட்ட மூத்த ‘குடி’ மகனுக்கு அடி உதை...டாஸ்மாக் அட்டூழியம்

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மதுபானங்கள் விற்பனை செய்கிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் அதிகம் வசூலிப்பது அப்பட்டமாக நடக்கிறது.

    மதுபானங்கள் கிடைத்தால் போதும் என்று கூடுதல் பணத்தை பற்றி கவலைப்படாமல் மதுபானங்களை வாங்குகிறார்கள் மதுபிரியர்கள். இதனிடையே சில இடங்களில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்வதை மதுப்பிரியர்கள் தட்டிக்கேட்காமலும் இல்லை.

    டாஸ்மாக் பணியாளர்

    டாஸ்மாக் பணியாளர்

    அப்படி தட்டி கேட்டால் தகராறு ஏற்பட்டு சண்டைகளும் ஏற்படுகிறது. மதுபானக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்யும் பிரச்சனை முதியவர் ஒருவர் தட்டிக் கேட்டுள்ளார். அவரை அடித்து உதைத்துள்ளார் அங்கிருந்த டாஸ்மக் பணியாளர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    சம்பவம் எங்கு நடந்தது. இந்த சம்பவம் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டம் கா.பரமத்தி ஒன்றியத்தில் நடந்துள்ளது. அங்குள்ள தென்னிலை பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கச் செல்லும் வாடிக்கையாளர்களிடம் குவாட்டர் மற்றும் பீர் பாட்டில்களுக்கு ஒரிஜினல் விலையைவிட ரூ.10 அதிகம் வாங்கிக்கொண்டு கொடுப்பதாக கூறப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் சம்பவம்

    தமிழகம் முழுவதும் சம்பவம்

    அதைத்தட்டிக்கேட்ட வாடிக்கையாளர் ஒருவரை ஒயின்ஷாப் சூப்பர்வைசர் தடியைக் கொண்டு தாக்கியிருக்கிறார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக வருகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பது நடப்பதாக புகார் உள்ளது.

    குடிமகன்கள் கோரிக்கை

    குடிமகன்கள் கோரிக்கை

    இந்த விவகாரத்தில் அரசு உறுதியான உத்தரவு பிறப்பித்து கூடுதல் பணம் வசூலிப்பதை அரசு தடை செய்ய வேண்டும் மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மற்ற மாநிலங்களில் கிடைக்கும் எந்த பிராண்ட் மதுவும் டாஸ்மாக் கடைகளில் கிடைப்பது இல்லை என்றும், குறிப்பிட்ட சில மதுவகைகள் மட்டுமே கிடைப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+