என்ன நல்லது செய்தீர்கள்… வாக்கு சேகரிக்க சென்ற காங்., வேட்பாளர் ஜோதிமணிக்கு எதிர்ப்பு
கரூர்: வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் அமைச்சரும், தி.மு.க மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜிக்கும், காங்கிரஸ் கரூர் வேட்பாளர் ஜோதி மணிக்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பதவியை, அமமுக- வில் இருந்து பிரிந்து வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கொடுத்ததில் இருந்தே, அம்மாவட்ட திமுக வினரிடையே அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோமூர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற செந்தில் பாலாஜிக்கும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவல்துறையின் பாதுகாப்போடும், ராணுவ பாதுகாப்போடும் தான் இனி செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் வாக்குகள் சேகரிக்க முடியும் என அக்கட்சி நிர்வாகிகள் காதுபட பேசியதாக தெரிகிறது.
மேலும், வாங்கல், சோமூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நீங்கள் ( செந்தில் பாலாஜி ) அமைச்சராக இருக்கும் போது என்ன நல்ல திட்டங்கள் செய்தீர்கள் என்றும் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications