எம்ஆர் விஜயபாஸ்கர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.. 100 கோடி நில மோசடி வழக்கில் திருப்பம்
கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலிப் பத்திரம் மூலமாக ஏழு பேர் பத்திரப் பதிவு செய்திருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர், கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருத்தார். இந்த வழக்கில் காவல்துறையினர் தன் மீது எப்ஐஆர் போடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிந்த, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த ஜூன் 25ம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் மேல்முறையீடு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிபிசிஐடி போலீசார் அவரை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனிடையே எம்.ஆர்.விஜய பாஸ்கர் மீது புகார் அளித்த பிரகாஷ் என்பவர் அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில். 100 கோடி ரூபாய் மதிப்புகொண்ட அந்த 22 ஏக்கர் நிலத்தை, தான் சொல்லும் நான்கு நபர்களுக்கு எழுதித் தரும்படி எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்னை மிரட்டி வந்தார் . எனவே அந்தச் சொத்தை என் மகள் சோபனா பெயரில், தான செட்டில்மென்ட் எழுதிக் கொடுத்தேன்.
இதனால் என்னுடைய மகள் சோபனாவை மிரட்டி, கையெழுத்து பெற்றதுடன். மோசடியாக ஒரு கிரயப் பத்திரத்தை பதிவுசெய்து விட்டது எம்ஆர் விஜயபாஸ்கர் தரப்பு. நான் கொடுத்திருந்த ரூ.10 கோடி கடனுக்கு, கடந்த ஆறு மாத காலமாக விஜயபாஸ்கர் வட்டியும் தரவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் எம்.ஆர்.விஜய பாஸ்கர் வெளிமாநிலங்களுக்கு சென்று தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து தனிப்படை போலீசார் வெளிமாநிலங்களுக்கு விரைந்து சென்றுள்ளனர். அண்மையில் கேரளாவில் தங்கி உள்ளதாக தகவலை அடுத்து அங்கும் சென்றும் தேடி வருகிறார்.
இந்நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல் நிலைய போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை எம்ஆர் விஜயபாஸ்கர் பெயர் வழக்கில் சேர்க்கப்படாத நிலையில், தற்போது பெயர் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
ஆதவ் அர்ஜுனாவுக்கு அடுத்த சிக்கல்.. மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications