கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. இறுகும் பிடி.. புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ தீவிர விசாரணை
கரூர்: தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இன்று ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆன்ந்த் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. தவெகவின் உயர் மட்ட நிர்வாகிகளான இருவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது வழக்கு விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து இருந்த நிலையில், கூட்டத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கியது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதைவிசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி தலைமையில் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கரூர் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நேரில் ஆஜராக சொல்லி சிபிஐ விசாரணை நடத்தியது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட சாலையை நவீன கருவிகள் கொண்டு அளவீடு செய்தும் சிபிஐ விசாரணை நடத்தியது.
விஜய் பிரசார பேருந்தில் இடம் பெற்று இருந்த சிசிடிவி காட்சிகளையும் சிபிஐ பெற்று விசாரணை நடத்தி வருகிறது. கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில், இன்று தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. சிபிஐ விசாரணைக்காக இருவரும் கரூரில் உள்ள சிபிஐ முகாம் அலுவலகத்தில் ஆஜர் ஆகினர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் விஜய்யின் பிரசார வாகனத்தில் ஆதவ் அர்ஜுனா இருந்தார். அதேபோல, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர் என்ற அடிப்படையில் புஸ்சி ஆனந்த் மீது தமிழக அரசு அமைத்த எஸ்ஐடி வழக்குப்பதிவு செய்து இருந்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெகவின் உயர் மட்ட நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவிவிடம் சிபிஐ இன்று விசாரணை மேற்கொண்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா?












Click it and Unblock the Notifications