கரூர்:வீரணம்பட்டி கோவிலுக்கு சீல் - எதிர்ப்பு தெரிவித்து 2,000 பேர் கடவூர் தாசில்தார் ஆபீஸ் முற்றுகை
கரூர்: தலித்துகளை கோவிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை என கூறி வீரணம்பட்டி காளியம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்கத்தினர் 2,000 பேர் நேற்று கடவூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீரணம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. அப்போது தலித் இளைஞர் சக்திவேல் என்பவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என கூறி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அரசு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டனர். இருதரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஏற்படாத நிலையில் அதிகாரிகள், வீரணம்பட்டி கோவிலுக்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது கோட்டாட்சியர் சிறை பிடிக்கப்பட்டார். 3 மணிநேரத்துக்கு பின் கோட்டாட்சியர் விடுவிக்கப்பட்ட போது அவரது வாகனம் சிறுமி மீது மோதி அவருக்கு கால் முறிந்தது. இது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வகையில் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வீரணம்பட்டி கோவில் சீல் வைக்கப்பட்டதை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்கத்தினர் சுமார் 2,000 பேர் கடவூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட நேற்று பேரணியாக சென்றனர். தரகம்பட்டி கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக இந்த பேரணி நடத்தப்பட்டது. ஆனால் கடவூர் தாசில்தார் அலுவலகம் அருகே இப்பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊராளி கவுண்டர் சங்கத்தினர் 10 பேர் மட்டும் கடவூர் தாசில்தாரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறி நடந்த நபரையே தாக்கியதாகவும் அதுவே ஜாதிய பிரச்சனையாக திசை திருப்பப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வீரணம்பட்டி காளியம்மன் கோவில் அரசுக்கு சொந்தமானது அல்ல. தனியார் நிலத்தில் கட்டப்பட்டது. தனியாருக்கு சொந்தமான கோவில் நிலத்தில் மற்றொரு ஜாதியினர் உள்ளே நுழைந்து வழிபட எப்படி அனுமதிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வீரணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications