கரூர்:வீரணம்பட்டி கோவிலுக்கு சீல் - எதிர்ப்பு தெரிவித்து 2,000 பேர் கடவூர் தாசில்தார் ஆபீஸ் முற்றுகை
கரூர்: தலித்துகளை கோவிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை என கூறி வீரணம்பட்டி காளியம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்கத்தினர் 2,000 பேர் நேற்று கடவூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீரணம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. அப்போது தலித் இளைஞர் சக்திவேல் என்பவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என கூறி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அரசு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டனர். இருதரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஏற்படாத நிலையில் அதிகாரிகள், வீரணம்பட்டி கோவிலுக்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது கோட்டாட்சியர் சிறை பிடிக்கப்பட்டார். 3 மணிநேரத்துக்கு பின் கோட்டாட்சியர் விடுவிக்கப்பட்ட போது அவரது வாகனம் சிறுமி மீது மோதி அவருக்கு கால் முறிந்தது. இது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வகையில் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வீரணம்பட்டி கோவில் சீல் வைக்கப்பட்டதை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்கத்தினர் சுமார் 2,000 பேர் கடவூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட நேற்று பேரணியாக சென்றனர். தரகம்பட்டி கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக இந்த பேரணி நடத்தப்பட்டது. ஆனால் கடவூர் தாசில்தார் அலுவலகம் அருகே இப்பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊராளி கவுண்டர் சங்கத்தினர் 10 பேர் மட்டும் கடவூர் தாசில்தாரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறி நடந்த நபரையே தாக்கியதாகவும் அதுவே ஜாதிய பிரச்சனையாக திசை திருப்பப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வீரணம்பட்டி காளியம்மன் கோவில் அரசுக்கு சொந்தமானது அல்ல. தனியார் நிலத்தில் கட்டப்பட்டது. தனியாருக்கு சொந்தமான கோவில் நிலத்தில் மற்றொரு ஜாதியினர் உள்ளே நுழைந்து வழிபட எப்படி அனுமதிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வீரணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications