நான் கேட்கிறேன்.. எடப்பாடிக்கு, சேலத்தை தவிர வேறு ஏதாவது ஒரு ஊர் தெரியுமா?.. ஸ்டாலின்
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளார்.
கரூர்: ஸ்டாலின் என்றைக்காவது கிராமத்திற்கு போனதுண்டா என்று கேட்கும் எடப்பாடிக்கு, சேலத்தைத் தவிர வேறு ஏதாவது ஒரு ஊர் தெரியுமா? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஸ்டாலின் சமீப காலமாக கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். இதில் மக்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு, மனுக்களையும் பெற்று, நிறைய விஷயங்களை பேசி வருகிறார். ஸ்டாலினின் இந்த மக்கள் சந்திப்பை அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
கடந்த 16ம் தேதியன்று சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோதெல்லாம் கிராமத்திற்குச் செல்லாதவர்கள் இப்பொழுது கிராமத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

போகாத கிராமம் இல்லை
இதற்கு ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பதிலளித்துள்ளார். அப்போது "நான் முதன்முதலில் இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அந்த இளைஞர் அணி சார்பில் கிராமப் பகுதியிலிருந்து தான் என்னுடைய அரசியல் பயணத்தை துவங்கினேன். நான் போகாத கிராமங்களே தமிழ்நாட்டில் கிடையாது.

நூல் நிலையங்கள்
நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அனைத்து ஊராட்சி தலைவர்களையும் ஒருங்கிணைத்து நிர்வாகிகள் அடங்கிய ஒரு மாநாட்டை நடத்தியவன் நான். அதுமட்டுமல்ல... நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரத்தில்தான் 12,617 ஊராட்சி பகுதிகளில் நூல் நிலையங்களை உருவாக்கப்பட்டது.

இவன்தான் தளபதி
நான் கேட்கின்றேன், ஸ்டாலின் என்றைக்காவது கிராமத்திற்கு போனது உண்டா என்று கேட்கும் எடப்பாடிக்கு, சேலத்தை தவிர வேறு ஏதாவது ஒரு ஊர் தெரியுமா? இன்னைக்கு நான் எங்கு போனாலும் இவன்தான் ஸ்டாலின், இவன்தான் தளபதி, இவன்தான் கலைஞரின் மகன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்களோடு மக்களாக இருந்திருக்கிறேன்.

முற்றுப்புள்ளி
நான் பெருமை பேசுவதகாக யாரும் நினைத்துவிடக்கூடாது. மக்களோடு மக்களாக பழகி அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால்தான் நான் இதைக் கூறுகின்றேன். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த கிராம சபைக் கூட்டம் நிச்சயமாக பயன்படும்'' என்றார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications