தேதியே இன்னும் வரல! கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் வேட்பாளரை அறிவித்த சீமான்! யார் இவர்?
கரூர்: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் முன்கூட்டியே பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றன. இந்த கருத்தை திமுகவின் எம்பி டிஆர் பாலு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் இப்போது இருந்தே தொடங்கி விட்டன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் பாஜகவின் வெற்றி பயணத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
அதாவது பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், தமிழ முதல்வர் முக ஸ்டாலினின் திமுக, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள், வைகோவின் மதிமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இதனால் தேசிய அரசியல் களமும், மாநில அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தை பொறுத்தவரை கடந்த முறையை போல் மிகப்பெரிய கூட்டணியுடன் திமுகவும், பாஜக உள்பட மேலும் சில கட்சிகளும் அதிமுகவும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளது. மாறாக நாம் தமிழர் கட்சி மீண்டும் கூட்டணி ஏதுமின்றி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் களமிறங்க உள்ளது. மேலும் தொகுதி வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் சீமான் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். அந்த வகையில் கரூரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது அவர் ‛‛வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் கருப்பையா என்பவர் போட்டியிட வாய்ப்பளிப்பேன். அவருக்கு வாக்களிக்க வேண்டும்'' என்றார். இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கருப்பையாவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முழுமுனைப்பில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும் தற்போது கரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கருப்பை கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் தம்பித்துரை 2ம் இடம் பிடித்தார். மாறாக கருப்பையா 38,543 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். இதையடுத்து மீண்டும் வரும் நாடாளுமன்ற தொகுதியில் கருப்பையாவை களமிறக்க உள்ளதாக நாம் தமிழர் சீமான் அறிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications