ஊராட்சி சபை கூட்டம் நடத்துவது எதற்கு?... மு.க. ஸ்டாலின் விளக்கம்
Recommended Video

கரூர்: எடப்பாடி பழனிசாமி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் ஈசனத்தத்தில் நடைபெற்று வரும் ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் பிரச்சனையை பற்றி அதிமுக அரசு கவலைப்படுவதில்லை.

ஓபிஎஸ் தனது வீட்டில்தான் சாமி கும்பிடலாமே தவிர கோட்டையில் எப்படி கும்பிட முடியும்? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்தியதை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே ஊராட்சிசபை கூட்டம் நடத்தப்படுகிறது. அரசியலுக்காக உங்களை நான் பார்க்க வரவில்லை. பிரச்சனைகளை கேட்க வந்துள்ளேன். நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்தினேன், சுமார் 12 ஆயிரம் கிராமங்களில் நூலகம் அமைத்து கொடுத்தேன்.
ஜெயலலிதா பெயரை பயன்படுத்திக்கொண்டு ஏதோ செல்வாக்கு பெற்றது போல் அதிமுக ஆட்சி நடத்துவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications