அடேங்கப்பா.. நினைத்ததற்கு மேலாக செயல்படுகிறார்.. யாரை பாராட்டுகிறார் எஸ்.வி.சேகர் பாருங்க!
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் எஸ்.வி. சேகர் பாராட்டு தெரிவித்தார்.
கரூர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறாரா என்று நினைத்தோம்.. ஆனால் நினைச்சதுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நடிகர் எஸ்.வி.சேகர் பாராட்டியுள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ், அதிமுக, கட்சிகளில் இருந்துவிட்டு தற்போது பாஜகவில் உள்ளார். பிரதமர் மோடிக்கு நெருக்கமாவும் இருக்கிறார்.
அடிக்கடி தமிழக பாஜக தலைமை மாறும்போதெல்லாம், இவரது எஸ்.வி.சேகர் பெயர்தான் அடிபட்டு போகிறது.

அவதூறு கேஸ்
இந்த நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் எஸ்.வி. சேகர் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியதாக என் மீது கேஸ் போடப்பட்டது.

ஷேர் செய்தேன்
ஆனால் அது என் கருத்து இல்லை. எனக்கு ஒருவர் பேஸ்புக்கில் அனுப்பியதைதான் நான் ஷேர் செய்தேன். ஆனாலும் இந்த பிரச்சனை காரணமாக என் மீது 7, 8 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஒரே இடத்தில் நடத்தி முடிக்க வக்கீல்களிடம் பேசி வருகிறேன்.

தென்சென்னை
திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்தியது நியாயம்தான். எம்பி தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. அப்போது பாஜக தலைமை விரும்பினால் தென்சென்னை தொகுதியில் நான் போட்டியிடுவேன்.

எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி என்னதான் செய்யப்போகிறார் என்று நாமெல்லாம் நினைத்தோம். ஆனால் நாம நினைச்சதுக்கும் மேலாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு தொடர்ந்து வெற்றி பெற்று பாரத பிரதமராக மோடி நீடிப்பார்.

தனி நாடா?
மத்திய அரசின் நிழலாக தமிழக அரசு செயல்படுகிறது என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை. அதுக்கான அவசியமும் இல்லை. தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் தனி நாடாகி விடுமா? மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் மாநில அரசுக்கு தேவையான நல்லது கிடைக்கும்" என்றார்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications