இதற்கு பெயர் தேர்தலா? வாக்கு எண்ணும் மையத்திலேயே அமர்ந்து தர்ணா.. செந்தில் பாலாஜி, ஜோதிமணி அதிரடி!
கரூரில் வாக்கு எண்ணுவதிலும், முடிவுகளை அறிவிப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி கரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங். எம்பி ஜோதிமணி தர்ணா போராட்டம் செய்து வருகிறார்கள்.
கரூர்: கரூரில் வாக்கு எண்ணுவதிலும், முடிவுகளை அறிவிப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி கரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங். எம்பி ஜோதிமணி தர்ணா போராட்டம் செய்து வருகிறார்கள்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் வேகமாக வெளியாகி வருகிறது. 24 மணி நேரத்தை கடந்து வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது. இதுவரை மொத்தம் 7 மாவட்டங்களில் மொத்தமாக வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பகுதிகளில் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக கரூரில் க.பரமத்தியில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

என்ன செய்தனர்
பரமத்தியில் 16 வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காங். வேட்பாளருக்கு பதிலாக அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதற்காக அறிவிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அங்கு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக இவர்கள் இருவரும் புகார் வைத்துள்ளனர்.

பிரச்சனையா
இதற்கு எதிராக புகார் தெரிவித்து செந்தில் பாலாஜி, ஜோதிமணி இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி வெற்றி பெற்றதை அறிவிக்கவில்லை, மீண்டும் வாக்குகளையே எண்ண வேண்டும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணும் மையத்தில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜோதிமணி தற்போது டிவிட்டும் செய்துள்ளார். அதில், கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் 1.அஞ்சூர்- திமுக 2 கூடலூர் மேற்கு காங்கிரஸ் வெற்றிபெற்று இடங்களை பல மணி நேரமாக அறிவிக்காமல் நிறுத்திவைத்தனர்.
|
காவல்துறை
ஆனால் இரவோடு இரவாக காவல்துறை குவிக்கப்பட்டு, அதிமுக வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெயர் தேர்தலா? மக்கள் தேர்வுக்கு மதிப்பில்லையா?, என்றுள்ளார். அவரின் இந்த புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications