பயில்வான் ரங்கநாதன் எல்லை மீறி பேசுறாரு.. நாங்களும் மனுசங்கதான் - நடிகை ஆல்யா மானசா குமுறல்
கரூர்: சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள் குறித்து விமர்சனம் என்ற பெயரில் எல்லை மீறி நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுவது மிகவும் தவறு என்று சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தெரிவித்து உள்ளார்.
Recommended Video
"லிட்டில் வீ" என்ற பெயரில் பல் மருத்துவமனை தமிழகத்தில் சென்னை, கோவை மாநகரங்களில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் - கோவை சாலையில் இந்த மருத்துவமனையின்
புதிய கிளை மருத்துவர் ஷிஃபா தலைமையில் இன்று தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா குத்து விளக்கேற்றி மருத்துவமனையை தொடங்கி வைத்தார். அப்போது தனது மருத்துவ முறை குறித்து மருத்துவர் ஷிஃபா செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஆல்யா மானசா எதிர்காலத்தில் பல் சிகிச்சை முறையில் "தடுப்பு குழந்தை பல் மருத்துவம்" சிறப்பான நிலையை எட்டும் என்றார். அவரிடம் நடிகர் பயில்வான் ரங்கநாதன் திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்து தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆல்யா மானசா, "சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள் குறித்து விமர்சனம் என்ற பெயரில் எல்லை மீறி நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுவது மிகவும் தவறு. நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. நடிகர் பயில்வான் ரங்கநாதன் இவ்வாறு பேசுவது வருத்தமளிப்பதாக உள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications