Karur stampede latest news live updates: இப்போது ஏன் கண்கள் கலங்குது ஸ்டாலின்? எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

கரூர்: தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் கரூர் பரப்புரையின் போது உயிரிழந்த 40 பேரின் ஆத்மா
சாந்தி அடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தை சேர்ந்த புரோகிதர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்திற்கு பகல் 12 மணிக்கு வருவதாக சொன்ன அவர் இரவு 7.10 மணிக்குத்தான் வந்திருந்தார்.

அப்போது விஜய்யின் முகத்தை பார்க்க மக்கள் முண்டியடித்துச் சென்ற போது கூட்ட நெரிசலில் பலர் சிக்கி கீழே விழுந்தனராம். அப்போது அவர்கள் மீது பலர் ஏறி மிதித்ததில் 41 பேர் இறந்துவிட்டனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கரூரில் இப்படி ஒரு துயரச் சம்பவம் நடந்ததுமே விஜய் அந்த ஸ்பாட்டை விட்டு ஓடி வந்து சென்னைக்கு வந்துவிட்டார். ஆனால் 70 வயதுக்கு மேல் ஆகும் முதல்வரோ இரவில் தூக்கம் வராமல் காலை செல்லும் திட்டத்தை கைவிட்டுவிட்டு நள்ளிரவு விமானத்தில் கரூர் சென்றார். அங்கு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அது போல் கரூர் மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். முதல்வரை போல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, சசிகலா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருந்தனர்.

இந்த கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்.

Karur Stampede  Karur  TVK  Vijay

Sep 29, 2025, 10:03 pm IST

கரூர் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது
Sep 29, 2025, 10:03 pm IST

விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் 41 பேர் உயிரிழந்த நிலையில் வழக்கு
Sep 29, 2025, 10:03 pm IST

மதியழகன் உள்பட 5 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது
Sep 29, 2025, 6:27 pm IST

தவெக கூட்டத்தில் காயமடைந்த 51 பேர் வீடு திரும்பினர் - கரூர் மாவட்ட ஆட்சியர்
Sep 29, 2025, 6:27 pm IST

காயமடைந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - கரூர் மாவட்ட ஆட்சியர்
Sep 29, 2025, 6:27 pm IST

மீதமுள்ள 59 பேருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்
Sep 29, 2025, 5:31 pm IST

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
Sep 29, 2025, 5:31 pm IST

கள்ளச்சாராய மரணங்களுக்கு கலங்காத கண்கள், இப்போது கலங்குகிறதா? ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sep 29, 2025, 5:31 pm IST

சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் கண்டு களித்த போது கண்கள் கலங்கவில்லையா? - எடப்பாடி
Sep 29, 2025, 5:31 pm IST

உங்கள் மகன் கரூருக்கு வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்துவிட்டு துபாய் போய்விட்டார் - எடப்பாடி பழனிசாமி
Sep 29, 2025, 5:31 pm IST

ஒருநபர் விசாரணை ஆணையம் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் - எடப்பாடி பழனிசாமி
Sep 29, 2025, 5:21 pm IST

தவெக பிரதிநிதிகள் என்னை சந்திக்கவில்லை- ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்
Sep 29, 2025, 5:21 pm IST

விஜய் தரப்பு ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு
Sep 29, 2025, 5:21 pm IST

கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு
Sep 29, 2025, 5:20 pm IST

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸ் தீவிரம்
Sep 29, 2025, 5:20 pm IST

கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை
Sep 29, 2025, 3:39 pm IST

விஜய் லேட்டா வந்ததுலாம் பிரச்சினையில்லையாம்!

விஜய் தாமதமாக வரவில்லை. அவர் வந்த வாகனத்தை பலர் பின்தொடர்ந்து வந்ததால் அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதால்தான் விஜய் மெதுவாக வந்தார். அது ஒரு பிரச்சினை இல்லை என தவெக வழக்கறிஞர் அறிவழகன் பதில் அளித்துள்ளார்.
Sep 29, 2025, 3:39 pm IST

“வேதனையை கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவிப்பேன்” - கரூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
Sep 29, 2025, 3:39 pm IST

"என்னையும், அமைச்சர் எல்.முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். அவர் வர விருப்பப்பட்டாலும், வர முடியாத சூழலால் எங்களை அனுப்பி வைத்துள்ளார்.” - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
Sep 29, 2025, 2:17 pm IST

அமைச்சருக்கு ஆஸ்கர் தரலாம் - அன்புமணி பேட்டி
Sep 29, 2025, 2:17 pm IST

கரூர் சம்பவத்தில் தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் தரலாம் - அன்புமணி
Sep 29, 2025, 1:47 pm IST

செந்தில் பாலாஜிக்கு தொடர்பு

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி குறித்து பேசியபோது பவர் கட் செய்யப்பட்டு, செருப்பு, கற்கள் வீசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Sep 29, 2025, 1:43 pm IST

கரூரில் நான் பார்த்த காட்சிகள்... ஸ்டாலின் உருக்கம்

"கரூரில் நான் பார்த்த காட்சிகள் என் நெஞ்சை விட்டு அகலவில்லை. உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எம் மக்கள்" என முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் உருக்கம்.
Sep 29, 2025, 1:36 pm IST

இரவிலும் பிரேத பரிசோதனை செய்யலாம்

இரவில் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்ற விதியை மீறி கரூரில் இறந்த 39 பேரின் உடல்களுக்கு அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்ததாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியான நிலையில் தமிழக அரசு விளக்கம்.
Sep 29, 2025, 1:09 pm IST

கரூரில் உயிர் சேதம்! எச்சரித்தும் கேட்கவில்லை- எஃப்ஐஆர்

கரூரில் உயிர் சேதம் ஏற்படும் என எச்சரித்தும் கேட்கவில்லை என கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) பரபரப்பான தகவல் கிடைத்தது.
Sep 29, 2025, 12:13 pm IST

தவெக மனுவை இன்று ஏற்க ஹைகோர்ட் கிளை மறுப்பு

கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி தவெகவின் ஆதவ் அர்ஜுனா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் தற்போது நீதிமன்றம் தசரா விடுமுறையில் இருப்பதால் நாளை மனு தாக்கல் செய்தால் வரும் வெள்ளிக்கிழமை (அக்.3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Sep 29, 2025, 11:38 am IST

பட்டினம்பாக்கம் வீட்டிலும் விஜய்க்கு பாதுகாப்பு

நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினம்பாக்கம் வீட்டிற்குச் சென்ற விஜய்க்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் யாரையும் சந்திக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மாலை நீலாங்கரை வீட்டிற்கு விஜய் மீண்டும் செல்கிறார் என தகவல்கள் கிடைத்துள்ளன.
Sep 29, 2025, 11:27 am IST

"விஜய் கொலை குற்றவாளி"- குளித்தலையில் போஸ்டர்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு ஆறுதலாக போய் நிற்காமல் அங்கிருந்து தப்பி சென்னைக்கு ஓடிய விஜயை கொலை குற்றவாளி என்பதால் "கைது செய்" என தமிழ்நாடு மாணவர் சங்கத்தினர் குளித்தலை பகுதியில் போஸ்டர் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sep 29, 2025, 11:14 am IST

விஜய்யின் பட்டினம்பாக்கம் இல்லத்தில் நுழைந்த 3 போலீஸ்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்த விஜய், தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினம்பாக்கம் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எதிரே உள்ள காவல் நிலைய போலீஸார் 3 பேர் உள்ளே சென்றுள்ளனர்.
Sep 29, 2025, 11:14 am IST

அக்னி தீர்த்த கடலில் 41 பேருக்கு அஞ்சலி

நடிகர் விஜய்யின் கரூர் பரப்புரையின் போது உயிரிழந்த 40 நபர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புரோகிதர்கள்.
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+