கையில் வீச்சரிவாள்.. வாய் நிறைய பச்சை பச்சையாய்.. நடுரோட்டில் இளைஞர் ரகளை.. யாருக்காக தெரியுமா?
நடுரோட்டில் குடிபோதையில் இளைஞர் தகராறு செய்துள்ளார்
Recommended Video
கரூர்: கையில் வீச்சரிவாள்.. வாய் நிறைய பச்சை பச்சையாய் கெட்ட வார்த்தைகளுடன்.. நடுரோட்டில் நின்று ரகளை செய்கிறார் ஒரு இளைஞர்.. சசிகலாவை விடுதலை செய்ய போறீங்களா? இல்லையா என்றும் ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகனங்களை வழிமறித்து கேள்வி எழுப்பி அட்டகாசம் செய்த இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர், திடீரென கையில் கோடாரி, வீச்சரிவாளை தூக்கி வந்தார்.. வரும்போதே தள்ளாடிக் கொண்டுதான் வந்தார்.. அது பிரதான சாலை என்பதால், பஸ், லாரி, டூவீலர்கள் சென்று கொண்டிருந்தன.
ஆபாச வார்த்தை
நடுரோட்டில் இவர் வந்து நின்று கொண்டார்.. ஆபாச வார்த்தைகளில் திடீரென எல்லாரையும் திட்ட ஆரம்பித்தார்... ஒரு இடத்தில் நிற்காமல், ரோட்டின் மையப்பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்தார்.. ஆத்திரம் ஆத்திமாக பேசினார்.
ரகளை
கோபத்தில் வீச்சரிவாளையும், கோடாரியையும் தூக்கி வீசி எறிந்தார்.. திரும்பவும் கீழே விழுந்ததை எடுத்து கையில் வைத்து கொண்டு மறுபடியும் கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார். இவர் எதற்காக இப்படி ரகளை செய்கிறார் என்று பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் புரியவில்லை.
சசிகலா விடுதலை
பிறகுதான் சசிகலாவை விடுதலை செய்ய போறீங்களா, இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.. பஸ், லாரி, டூவீலர்களில் சென்றவர்களை நிறுத்தி கேள்வி கேட்டார். இதை பார்த்ததும் பொதுமக்கள் அலறி ஓடினர்.. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்த அட்டகாசம் நடுரோட்டில் செய்து கொண்டிருந்தார்.. இதனால், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், அரை மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரும் அந்த பகுதியில் இருந்தார்களா என தெரியவில்லை.
விசாரணை
கொஞ்ச நேரத்தில், இளைஞருக்கு பளார் என்று ஒரு அடி விழுந்தது.. இளைஞரை அடித்தது அவரது சகோதரராம்.. 4 அடி அங்கேயே போட்டு, இழுத்துகொண்டு இளைஞரை கொண்டு போனார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி வீச்சரிவாளுடன் அமர்க்களம் செய்த இளைஞரை போலீசார் தேடி வருகிறார்கள்!