சிக்கன் கடை ஓனருடன் ஆசிரியை ‘குரூப் ஸ்டடி’.. மரத்தில் ஏறி எட்டி பார்த்த கணவன்! கிறுகிறு கிருஷ்ணகிரி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தனது காதல் மனைவி வேறொருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக பகீர் புகார் அளித்திருக்கிறார் காதல் கணவர். மேலும் கள்ளக்காதலனுடன் மனைவி தனிமையில் இருப்பதை அறிந்து வீட்டுக்கு பூட்டு போட்டதோடு, போலீசாரை வரவழைத்து பஞ்சாயத்து செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பலர் இறுதிவரை மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்றால் அது கேள்விக்குறி தான். காதலிக்கும் போது ஜாதி, மதம், பணம் என எதுவுமே தேவையில்லை என நினைக்கும் சில காதலர்கள் திருமணத்திற்கு பிறகு இதில் ஒவ்வொன்றும் முக்கிய தேவை எனக்கு கருதி வாழ்வில் இருந்து பிரிந்து சென்று விடுகின்றனர்.

Krishnagiri Crime Police

அவ்வாறு செல்லும் போது மேலும் பல பிரச்சனைகள் எழுவதும், திருமணம் தாண்டிய உறவுக்கு செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கிருஷ்ணகிரியில் அரங்கேறி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரும் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி காலத்திலேயே காதல் செய்து வந்துள்ளனர். தொடர்ந்து காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ள நிலையில், தொடர்ந்து தம்பதிகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சங்கீதாவுக்கு அரசு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்துள்ளது.

ஆனால் பழனிவேல் 15000 சம்பளத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அரசு வேலை பார்க்கும் சங்கீதா 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில் பழனிவேலுக்கு வெறும் 15000 ரூபாய் தான் ஊதியம் பெறுகிறார் என இருவருக்கிடையே பிரச்சனை எழுந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இதுவே அவர்களது பிரிவுக்கு காரணமாக வந்திருக்கிறது. தொடர்ந்து இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொண்ட நிலையில் சங்கீதா வாடிப்பட்டியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.

அப்போது சிக்கன் கடை நடத்தி வரும் தினேஷ் குமார் என்பவர் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தாய் வீட்டில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளனர். இதனை தெரிந்து கொண்ட பழனிவேல், தொடர்ந்து சங்கீதாவை கண்காணித்து வந்துள்ளார். அப்போது இருவரும் பழகி வருவதை உறுதி செய்துவிட்டு இது குறித்து தனது உறவினர்களை அழைத்துச் சென்று பிரச்சனை செய்துள்ளார்.

அப்போது அரசு பள்ளியில் வேலை பார்க்கும் தான் 15,000 சம்பளம் வாங்கும் பழனிவேலுடன் வாழ முடியாது எனவே நான் டைவர்ஸ் செய்து விடுகிறேன் எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆனால் காதலித்து கரம் பிடித்த மனைவியை விட முடியாது என பழனிவேல் உறுதியாக நிற்க இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிக்கன் கடை தினேஷ்குமார் சங்கீதாவின் வீட்டுக்கு வந்து தனிமையில் இருப்பதை பார்த்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல தினேஷ்குமார் சங்கீதாவின் வீட்டுக்கு வர, பழனிவேல் மரத்தில் ஏறி எட்டிப் பார்த்து இருவரும் தனிமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்ததோடு அவர்களை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டி உள்ளார். மேலும் இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர்களையும் காவல் துறையினரையும் அழைத்து புகார் தெரிவித்து இருக்கிறார்.

அப்போது வெளியே வந்த சங்கீதா தான் பழனிவேலுக்கு டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் டைவர்ஸ் வழங்காத நிலையில் வேரு ஒருவருடன் மனைவி இருப்பது எப்படி நியாயம் என கேட்டு பழனிவேல் புலம்பினார். இவ்வளவு நடந்தும் தினேஷ்குமார் வீட்டின் அறைக்குள்ளேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து உள்ளே இருந்த தினேஷ்குமாருடன் தொலைபேசியில் பேசிய போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+